வன்முறையின் மூலம் பாஜகவின் வளர்ச்சியை தடுத்துநிறுத்த முடியாது

கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு வன்முறையை கையாண்டு பாஜக.,வின் வளர்ச்சியை தடுக்கமுயலுகிறது என்று தேசியத் தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.


மூன்று நாள் பயணமாக லட்சத்தீவுக்கு செல்லும் வழியில் கேரளமாநிலம், கொச்சியில் அவர் செவ்வாய்க் கிழமை கூறியதாவது:கண்ணனூரில் ஆர்எஸ்எஸ் தொண்டர் சூரக்காடு பிஜு கொலைசெய்யப்பட்டது கண்டனத்துக் குரியது. அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அரசு செயலாற்ற வேண்டும். தங்களது கட்சி சித்தாந்தத்தின்படி ஆளுங்கட்சியினர் செயல்படக் கூடாது. அரசியல் வன்முறையை மாநில அரசு கண்காணிக்கத் தவறினால், ஆர்எஸ்எஸ் அமைப்பினர், கேரளமக்கள் ஆகியோருடன் இணைந்து மிகப் பெரிய போராட்டத்தை பாஜக முன்னெடுக்கும்.


கேரளத்தில் மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பாஜக, ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது.இதன்மூலம், பாஜகவின் வளர்ச்சியை மாநில அரசு தடுக்க முயற்சிசெய்வது தெளிவாகிறது. வன்முறையின் மூலம் பாஜகவின் வளர்ச்சியை மாநில அரசால் தடுத்துநிறுத்த முடியாது என்றார் அமித்ஷா.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...