சிக்கிம் மாநிலத்தில், ராணுவவீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், 'காஷ்மீர் எங்களுடையது; காஷ்மீர் பிரச்னைக்கு மோடி அரசாங்கம் நிரந்தரத்தீர்வை அளிக்கும். காஷ்மீர் பள்ளத்தாக்கின் தொடர்ச்சியான அமைதியின்மைக்கு பாகிஸ்தானே காரணம். இந்தியாவைச் சீர்குலைக்க நினைக்கும் பாகிஸ்தானின் கனவு ஒரு நாளும் பலிக்காது. அண்டை நாடுகளுடன் நட்புறவையே நாம் விரும்புகிறோம்.
ஆனால், பாகிஸ்தானின்போக்கில் மாற்றமே இல்லை. அவர்கள் மாறவேண்டும். இல்லை என்றால் மாற்ற வேண்டும். உலக மயமாக்கலுக்குப் பிறகு, ஒரு நாடு இன்னொரு நாட்டை எந்தவகையிலும் சிதைத்துவிட முடியாது. சர்வதேச சமூகமும் அதை ஏற்காது. நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற நிகழ்ச்சியில், பாகிஸ்தான் பங்கேற்க வேண்டும் என்று அழைப்புவிடுத்தோம். நட்புவேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். ஆனால், அவர்களுக்கு அதில் விருப்பமில்லை.
நாம், அமைதியை விரும்பும் அதேநேரத்தில், எதையும் எதிர்கொள்ளவும் நமக்குத் தெரியும். காஷ்மீர்ப் பகுதியில், கடந்த ஜூலையிலிருந்து வன்முறைகள் தீவிரமாகியுள்ளன.. இங்கு நடந்துவரும் போராட்டங்களால், வன்முறைகளால் சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளனர்" என்று கூறினார்.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.