மாணவர்களிடம் எந்த விதமான கட்டணங்களையும் ரொக்கமாக வசூலிக்க கூடாது

மாணவர்களிடம் எந்த விதமான கட்டணங்களையும் ரொக்கமாக வசூலிக்க கூடாது என்று அனைத்து கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்லூரிகள் மற்றும் பல்கலை கழங்களில் மாணவர்கள் செலுத்தவேண்டிய தேர்வு கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான கட்டணங்களையும் பெரும்பாலும் பணமாகவே செலுத்திவருகிறார்கள். ஒரு சில சமயங்களில் மட்டுமே டிமாண்ட் டிராப்ட், நெட்பேங்கிங் உள்ளிட்ட இதரவழிகளில் செலுத்துகிறார்கள். இந்த நிலையில், மாணவர்களிடம் எந்தவிதமான கட்டணங்களையும் ரொக்கமாக பெறக் கூடாது என்றும் மின்னணு பணப்பரிமாற்றம் (டிஜிட்டல் முறை) மூலமாக மட்டுமே கட்டணங்களை வசூலிக்கவேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறு பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு (யுஜிசி) உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசின் இந்த உத்தரவை தொடர்ந்து, மாணவர்கட்டணம், தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டணங்கள், கல்வி நிறுவனங்களின் அன்றாட செயல்பாடுகள் தொடர்பான பணப் பரிமாற்றங்களும் மின்னணு பரிமாற்றம் மூலமாகவே செலுத் தப்பட வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி அங்கு படிக்கும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலும் இந்தநடைமுறை பின்பற்றப்பட வேண்டும். மேலும், கல்வி வளாகங்களில் செயல்படும் உணவகங்கள் ரொக்க முறையை கைவிட்டுவிட்டு மின்னணு பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ரொக்கமாக நடைபெறும் பணப் பரிமாற்றங்களை கண்டறிந்து அவற்றுக்குப் பதிலாக மின்னணு பணப்பரிமாற்ற முறையை நடை முறைப்படுத்து வதற்கான வழிமுறைகளை ஆராயுமாறும் பல்கலைக்கழகங் களை யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்நடைமுறை கடைப்பிடிக்கப் படுவதை கண்காணிக்க அதற்கென தனி அதிகாரி ஒரு வரை நியமித்து மாதந்தோறும் யுஜிசிக்கு அறிக்கை அனுப்புமாறு அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...