மாணவர்களிடம் எந்த விதமான கட்டணங்களையும் ரொக்கமாக வசூலிக்க கூடாது

மாணவர்களிடம் எந்த விதமான கட்டணங்களையும் ரொக்கமாக வசூலிக்க கூடாது என்று அனைத்து கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்லூரிகள் மற்றும் பல்கலை கழங்களில் மாணவர்கள் செலுத்தவேண்டிய தேர்வு கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான கட்டணங்களையும் பெரும்பாலும் பணமாகவே செலுத்திவருகிறார்கள். ஒரு சில சமயங்களில் மட்டுமே டிமாண்ட் டிராப்ட், நெட்பேங்கிங் உள்ளிட்ட இதரவழிகளில் செலுத்துகிறார்கள். இந்த நிலையில், மாணவர்களிடம் எந்தவிதமான கட்டணங்களையும் ரொக்கமாக பெறக் கூடாது என்றும் மின்னணு பணப்பரிமாற்றம் (டிஜிட்டல் முறை) மூலமாக மட்டுமே கட்டணங்களை வசூலிக்கவேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்குமாறு பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு (யுஜிசி) உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசின் இந்த உத்தரவை தொடர்ந்து, மாணவர்கட்டணம், தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டணங்கள், கல்வி நிறுவனங்களின் அன்றாட செயல்பாடுகள் தொடர்பான பணப் பரிமாற்றங்களும் மின்னணு பரிமாற்றம் மூலமாகவே செலுத் தப்பட வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி அங்கு படிக்கும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலும் இந்தநடைமுறை பின்பற்றப்பட வேண்டும். மேலும், கல்வி வளாகங்களில் செயல்படும் உணவகங்கள் ரொக்க முறையை கைவிட்டுவிட்டு மின்னணு பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ரொக்கமாக நடைபெறும் பணப் பரிமாற்றங்களை கண்டறிந்து அவற்றுக்குப் பதிலாக மின்னணு பணப்பரிமாற்ற முறையை நடை முறைப்படுத்து வதற்கான வழிமுறைகளை ஆராயுமாறும் பல்கலைக்கழகங் களை யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்நடைமுறை கடைப்பிடிக்கப் படுவதை கண்காணிக்க அதற்கென தனி அதிகாரி ஒரு வரை நியமித்து மாதந்தோறும் யுஜிசிக்கு அறிக்கை அனுப்புமாறு அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...