இந்தியா வளர்ந்ததேசமாக உருவெடுக்க தொழில் நுட்பம் உதவும்

வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்ததேசமாக உருவெடுக்க தொழில் நுட்பம் பேருதவியாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திறன் வெளிப்படுத்தல்; தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வாழ்வை எளிமையாக்கல் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய வெப்பினாரில் கலந்துகொண்ட பிரதமர் இதுகுறித்து மேலும் கூறியது:

சிறு நிறுவனங்கள் தொழில் விதிமுறைகளை கடைபிடிக்கச் செய்யும் செலவினங்களை குறைக்க அரசுவிரும்புகிறது. எந்த விதமான செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதை பட்டியலிட்டு தருமாறு தொழில் நிறுவனங்களிடம் கேட்டுள்ளோம். இது வரை இது போன்ற 40,000 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப் பட்டுள்ளது.

வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்ததேசம் என்ற அந்தஸ்தை அடைவதற்கு தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் உதவும். டிஜிட்டல் புரட்சி அனைத்து மக்களையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக டிஜிட்டல் உள் கட்டமைப்பை நவீனமான முறையிலும், பரந்தவகையிலும் உருவாக்கி வருகிறோம்.

வரி செலுத்துவோர் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நேரடி தொடர்பில்லா வரி செலுத்தும் முறையை தொழில் நுட்பத்தின் உதவி கொண்டு உருவாக்கி செயல் படுத்தியுள்ளோம்.

5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற தொழில் நுட்பங்கள் மருத்துவம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் பெரியமாற்றங்களை ஏற்படுத்த தயாராக உள்ளன. சாமானியர்கள் எதிர்கொள்ளும் 10 சிக்கல்களை அடையாளம் கண்டு அதற்கு செயற்கை நுண்ணறிவு முறையில் தீர்வுகாண சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முற்சிக்க வேண்டும்.

தொழில்நுட்பம்தான் ‘‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’’ என்ற அடிப்படை திட்டத்தின் முயற்சியை உருவாக்கியது. ஜன்தன் யோஜனா, ஆதார், மொபைல் நம்பர் ஆகிய மூன்றும் சேர்ந்து ஏழைகளுக்கு நன்மைகளை வழங்க பலவழிகளில் உதவியுள்ளது. இவ்வாறு பிரதமர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...