மன அழுத்தத்தை போக்குவதில் யோகா முக்கியபங்கு

சர்வதேச யோகாதினத்தை யொட்டி கோவை ஈஷாயோகா மையம் சார்பில் ஆதியோகி சிலைமுன்பு யோகா நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய சுற்றுலாதுறை மந்திரி மகேஷ் சர்மா, ஈஷா நிறுவனர் சத்குரு ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனி திறமை உண்டு. அந்த திறமையை வெளிகொண்டு வரும் தொழில்நுட்பம் யோகா. இந்த தொழில் நுட்பம் அனைவருக்கும் சென்றுசேர வேண்டும். ஒருநாட்டை வல்லரசாக்க முடியாது. வல்லரசாக்க நாட்டில் உள்ள மக்களை யோகா மூலம் திறமையான வர்களாகவும், நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும் மாற்ற முடியும்.

அப்போது அந்த நாடு வல்லரசாக மாறமுடியும். இந்தியா கலாச்சாரத்துக்கு புகழ்பெற்றது. ஆதியோகிதான் யோகாவின் முதல் மனிதர். தற்போது ராணுவத்தினர் பலர் கொல்லப்படுகின்றனர். ஏராளமான சிறுவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதற்கு காரணம் மன நிலையை ஒரு முகப்படுத்த முடியாததுதான்.

மனிதனின் மன நிலையை ஒருமுகப்படுத்த யோகா முக்கியபங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், உபயோகா என்ற சாதாரண யோகா கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நபர் 100 பேருக்கு யோகா கற்றுக்கொடுத்தால் ஒருஆண்டில் 10 கோடி பேர் யோகா கற்க முடியும்.

உலகிற்கு இந்தியா கொடுத்தபரிசு யோகா. பிரதமர் நரேந்திரமோடி முயற்சியால் யோகா ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 192 நாடுகளில் இன்று யோகாதினம் கடைபிடிக்கப்படுகிறது. யோகாவை கற்பதன் மூலம் ஒரு ஆண் சூப்பர்மேன் ஆகலாம். ஒருபெண் சூப்பர் பெண் ஆகலாம்.

நாட்டில் உள்ள அனைவரும் யோகா கற்பதன் மூலமாக திறமையான வர்களாகவும், நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும் திகழ முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் 20 பல்கலைக் கழகங்கள் உள்ளன. மகாராஷ்டிராவில் 20 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இந்த 40 பல்கலைக்கழகங்களுக்கும் நான்தான் வேந்தர். இங்கு அனைவரும் யோகாகற்க அறிவுறுத்தப்படும். மாணவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் மன அழுத்தத்தால் பாதிக்கப் படுகிறார்கள்.

இந்த மன அழுத்தத்தை போக்க யோகா முக்கியபங்கு வகிக்கிறது. சர்க்கரைநோய் முதல் பல்வேறு நோய்களை குணப்படுத்த யோகா பயன்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தியா இளைஞர்கள் அதிகமாக உள்ள நாடு. அனைத்து இளைஞர்களும் யோகாகற்பதன் மூலம் இளைஞர்கள் திறமையானவர் களாகவும், ஒழுக்கம் உடையவர்களாகவும் விளங்க முடியும்.போதை, மது, பழக்கத்துக்கு அடிமையானவர்கள் கூட யோகாகற்றால் அதில் இருந்து விடுபட முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...