மன அழுத்தத்தை போக்குவதில் யோகா முக்கியபங்கு

சர்வதேச யோகாதினத்தை யொட்டி கோவை ஈஷாயோகா மையம் சார்பில் ஆதியோகி சிலைமுன்பு யோகா நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ், மத்திய சுற்றுலாதுறை மந்திரி மகேஷ் சர்மா, ஈஷா நிறுவனர் சத்குரு ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனி திறமை உண்டு. அந்த திறமையை வெளிகொண்டு வரும் தொழில்நுட்பம் யோகா. இந்த தொழில் நுட்பம் அனைவருக்கும் சென்றுசேர வேண்டும். ஒருநாட்டை வல்லரசாக்க முடியாது. வல்லரசாக்க நாட்டில் உள்ள மக்களை யோகா மூலம் திறமையான வர்களாகவும், நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும் மாற்ற முடியும்.

அப்போது அந்த நாடு வல்லரசாக மாறமுடியும். இந்தியா கலாச்சாரத்துக்கு புகழ்பெற்றது. ஆதியோகிதான் யோகாவின் முதல் மனிதர். தற்போது ராணுவத்தினர் பலர் கொல்லப்படுகின்றனர். ஏராளமான சிறுவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதற்கு காரணம் மன நிலையை ஒரு முகப்படுத்த முடியாததுதான்.

மனிதனின் மன நிலையை ஒருமுகப்படுத்த யோகா முக்கியபங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், உபயோகா என்ற சாதாரண யோகா கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நபர் 100 பேருக்கு யோகா கற்றுக்கொடுத்தால் ஒருஆண்டில் 10 கோடி பேர் யோகா கற்க முடியும்.

உலகிற்கு இந்தியா கொடுத்தபரிசு யோகா. பிரதமர் நரேந்திரமோடி முயற்சியால் யோகா ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 192 நாடுகளில் இன்று யோகாதினம் கடைபிடிக்கப்படுகிறது. யோகாவை கற்பதன் மூலம் ஒரு ஆண் சூப்பர்மேன் ஆகலாம். ஒருபெண் சூப்பர் பெண் ஆகலாம்.

நாட்டில் உள்ள அனைவரும் யோகா கற்பதன் மூலமாக திறமையான வர்களாகவும், நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும் திகழ முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் 20 பல்கலைக் கழகங்கள் உள்ளன. மகாராஷ்டிராவில் 20 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இந்த 40 பல்கலைக்கழகங்களுக்கும் நான்தான் வேந்தர். இங்கு அனைவரும் யோகாகற்க அறிவுறுத்தப்படும். மாணவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் மன அழுத்தத்தால் பாதிக்கப் படுகிறார்கள்.

இந்த மன அழுத்தத்தை போக்க யோகா முக்கியபங்கு வகிக்கிறது. சர்க்கரைநோய் முதல் பல்வேறு நோய்களை குணப்படுத்த யோகா பயன்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தியா இளைஞர்கள் அதிகமாக உள்ள நாடு. அனைத்து இளைஞர்களும் யோகாகற்பதன் மூலம் இளைஞர்கள் திறமையானவர் களாகவும், ஒழுக்கம் உடையவர்களாகவும் விளங்க முடியும்.போதை, மது, பழக்கத்துக்கு அடிமையானவர்கள் கூட யோகாகற்றால் அதில் இருந்து விடுபட முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...