மோடியின் திட்டத்தால் இந்தியா மிகவும் கவர்ச்சிகரமான நாடாக மாறும்

சிக்கிம் எல்லைப்பிரச்னையில் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், பிரதமர் நரேந்திரமோடியின் மேக் இன் இந்தியா, ஜிஎஸ்டி திட்டத்தால் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இந்தியா மிகவும் கவர்ச்சிக ரமானதாக மாறும் என சீன அரசுஊடகம் திடீரென பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான சிக்கிம் எல்லையில் சீனா தனது படைகளை குவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவும் படைகளை குவித்துள்ளதால் போர்பதற்றம் நிலவுகிறது.

கடந்த சில தினங்களாக இந்தியாவை கடுமையாக விமர்சித்துவந்த சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் நாளிதழ், இந்தியாவுக்கு ஒரு "கசப்பானபாடம் கற்பிக்கப்பட வேண்டும்." மேலும், இந்த மோதல்கள் தீவிரமடைந்தால், இந்தியா 1962 போரில் சந்தித்த இழப்பை விட "அதிக இழப்புக்களை" சந்திக்கும் என்று எச்சரித்தது. இதற்கு இன்றைய இந்தியா "1962-ல் இருந்து வேறுபட்டது" என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண்ஜேட்லி பதிலளித்தார்.

இந்நிலையில், குளோபல் டைம்ஸ் நாளிதழ் இன்றைய தலையங்கத்தில், பிரதமர் மோடியின் "மேக் இன் இந்தியா" மாற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை ஆகிய திட்டங்கள், இந்தியாவின் வரிசீர்திருத்த நடவடிக்கை உலகளாவிய வர்த்தகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும், குறைந்தவிலையில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சீனாவைவிட்டு இந்தியாவை நோக்கி நகர வழிவகுக்கும் என்று பாராட்டிள்ளது.

மேலும், பிரதமர் நரேந்திரமோடி 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்தியாவில் உருவாக்குவோம் "மேக்இன் இந்தியா" என்ற திட்டத்திற்கு பின்னர், நாட்டை ஒருங்கிணைப்பதில் இந்திய அரசாங்கம் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டுவருவதுடன் உலகளாவிய வியாபாரங்களுக்கான கவர்ச்சிகரமான உற்பத்தி இலக்கைநோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 

 

 

புதிய வரி சீரமைப்பானது மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்கவிக்கும்வகையில் அமையும் என தெரிவித்துள்ள சீன ஊடகம், இந்தவரி மூலம் பல வரிகள் ஒருவரியாக மாறியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. இதன் மூலம், தேசிய அளவில் பொதுசந்தைக்கு அடித்தளமிட்டுள்ள இந்தியா, உற்பத்திபோட்டி திறனையும் அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

"குறைந்த விலையில் உற்பத்தி சீனாவில் இருந்துபடிப்படியாக மாறிக்கொண்டே இருப்பதால், சீனாவை அடுத்த உலக தொழிற்சாலை" என்று மாற்றிக்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...