குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்தது

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 10 மணிக்கு தொடங்கியது. நாடுமுழுவதும் 776 எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கின்றனர். சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி, சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாக்களித்தனர். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை தலைமைச் செயலகத்தில் வாக்களித்தார். தமிழக சட்டப் பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

பிரதமர் மோடி, அமித்ஷா வாக்களித்தனர்

குடியரசுத் தலைவர்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். அதேபோல் நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக தேசிய தலைவர்அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் வாக்களித்தனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் மகிழ்ச்சிதான் என மாயாவதி கூறியுள்ளார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவதை வரவேற்கிறேன் என குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களித்த பிறகு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேட்டியளித்துள்ளார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவராவது எங்கள் போராட்டத்துக்கு கிடைத்தவெற்றி என்று கூறியுள்ளார்.

நாட்டின் 14வது குடியரசுத் தலைவர் தேர்வு செய்வதற்கான தேர்தல் முடிந்தது . இதில், பாஜ வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீராகுமாருக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்களும், சட்டப்பேரவைகளில்  எம்.எல்.ஏ.க்களும் ஓட்டளிக்கின்றனர். தேர்தல் முடிவு 20ம் தேதி தெரியும். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்கலாம் முடிவதால், நாட்டின் 14வது குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்தமாதம் 14ம் தொடங்கியது. தே.ஜ. கூட்டணி வேட்பாளராக, பீகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத்கோவிந்த்  நிறுத்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ஒரு எம்பி.யின் ஒட்டுமதிப்பு 708. எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுமதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். ஜனாதிபதி தேர்தலின் மொத்த ஓட்டுமதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்து 98 ஆயிரத்து 903. இதில், 50 சதவீதம் அதாவது 5 லட்சத்து 49 ஆயிரத்து 452 ஓட்டுக்கள் பெற்றால், அந்த வேட்பாளர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள � ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்� ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித� ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி� ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ� ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா� ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...