டார்ஜிலிங்கில் சகஜநிலை திரும்பாததற்கு மம்தா பானர்ஜியின் அணுமுறைகளே காரணம்

டார்ஜிலிங்கில் சகஜநிலை திரும்பாததற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அணுமுறைகளே காரணம் என மத்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது.

கூர்க்காலாந்து தனிமாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) உள்ளிட்ட அமைப்பு கள் ஒன்றுகூடி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு போராட் டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் சுற்றுலாத் தலமான டார்ஜிலிங் கில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.

இது தொடர்பாக நாடாளு மன்றத்தில் மார்க்சிஸ்ட் எம்பி முகமது சலீம் பூஜ்யநேரத்தில் பேசியதாவது:

பள்ளிகளில் வங்கமொழியைக் கட்டாயமாக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சிசெய்ததுடன், மலைப்பகுதி (டார்ஜிலிங்) நிர்வாகங்களிலும் தலையிடுகிறார். இதனால் அங்குபோராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த மக்கள் மீது போர்தொடுக்க வேண்டாம்.

மேற்குவங்க மாநில உணவுத் துறை அமைச்சர் மலைப் பகுதிகளுக்கு அத்தியாவசியப் பொருட் கள் எடுத்துச் செல்வது தடுக்கப்படும் என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இந்தவிஷயத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. அரசியலமைப்புச் சட்டப்படி ஆட்சி நடத்த மம்தாவுக்கு அறிவுறுத்த வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார், ‘டார்ஜிலிங்கில் தற்போதைய நிலவரம் மிகவும்மோசமாக உள்ளது. அங்கு சகஜநிலை திரும்பவேண்டும். அமைதியான மலைப்பகுதியில் தீ பற்றி எரிகிறது என்றால் அதற்குக்காரணம் முதல்வர் மம்தாவின் அணுகுமுறைதான். மீண்டும் அங்கு அமைதி நிலவினால் மட்டுமே மத்திய, மாநில அரசுகள் மற்றும் கூர்க்காபிராந்திய நிர்வாகம் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தமுடியும்’ என்றார். இந்த விவாதத்தின்போது மக்களவையில் திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் எவரும் இல்லை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள � ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்� ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித� ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி� ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ� ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா� ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...