பிரதமர் மோடியை எக்ஸ் வலைத்தளத்தில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியன் கடந்துள்ளது

பிரதமர் மோடியை எக்ஸ் வலை தளத்தில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை (10 கோடி) கடந்துள்ளது. உலக அளவில் எக்ஸ் தளத்தில் அதிக பாலோயர்கள் கொண்ட 7வது பிரபலமாக உள்ளார் மோடி.

உலக அளவில் தலைவர் பொறுப்பில் உள்ளவர்களை ஏராளமானோர் ,எக்ஸ் வலை தளம் உட்பட அனைத்து சமூக வலை தளத்திலும் பாலோ செய்து வருகின்றனர்.

அந்தவகையில் பிரதமர் மோடிக்கும் அனைத்து சமூக வலை தளங்களிலும் பாலோயர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் எக்ஸ் வலை தளத்தில் பிரதமரை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியன் (10 கோடி) ஆக அதிகரித்து உள்ளது.

இவரை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் (38.1 மில்லியன் ), துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது (11.2 மில்லியன்) மற்றும் போப் பிரான்சிஸ் (18.5 மில்லியன்) ஆகியோர் உள்ளனர்.

இந்தியாவிலும் அரசியல் தலைவர்களை பாலோ செய்வர்களில் பிரதமரே முதலிடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்-க்கு 26.4 மில்லியன் , டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 27.5 மில்லியன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் (19.9 மில்லியன்), மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (7.4 மில்லியன்), ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மற்றும் என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார் (2.9 மில்லியன்) என அடுத்தடுத்து உள்ளனர்.

அரசியல் வாதிகளை தவிர விராட் கோலி (64.1 மில்லியன்), பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர் ஜூனியர் (63.6 மில்லியன்), அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் (52.9 மில்லியன்) உள்ளிட்டோரும் பிரதமருக்கு அடுத்த நிலையிலே யே உள்ளனர்.

பிரதமரை பின் தொடருபவர்கள் எண்ணிக்கை எக்ஸ் வலை தளத்தை தவிர்த்து யூடியூப்பில் 25 மில்லியன் பேர்களும் இன்ஸ்டாகிராம் கணக்கில் 91 மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர்.

பிரதமரின் எக்ஸ் வலை தளம் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 30 மில்லியன் பாலோயர்கள் அதிகரித்து உள்ளனர். பிரதமர் சமூக வலை தளத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதாலும், அனைத்து தரப்பினரின் கேள்விகளுக்கும் உடனடியாக பதில் அளிப்பதாலும், யாராலும் அணுகுவதற்கு எளிதாக இருப்பதும் பாலோயர்கள் அதிகரிப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...