புதுவை மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் தலைமையில், பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், தங்க. விக்ரமன், செல்வகணபதி மற்றும் நிர்வாகிகள் குடிமைபொருள் வழங்கல்துறை இயக்குனர் பிரியதர்ஷினியை இன்று சந்தித்தனர்.
அப்போது அரசால் வழங்கப்படும் இலவசபொருட்கள் வேண்டாம் என கையெழுத்திட்டு அதனுடன் ரேஷன் கார்டு நகலையும் இணைத்து அளித்தனர்.
பின்னர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோளை ஏற்று முதல்கட்டமாக பா.ஜனதாவை சேர்ந்த 100 பேர் இலவசங்கள் வேண்டாம் என விண்ணப்பித் துள்ளோம்.
கடந்த 50 ஆண்டாக நடைபெற்ற ஆட்சியில் தகுதியற்ற வர்களுக்கு இலவசங்களை வாரிவழங்கியதால் அரசுக்கு கடும் நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிதி நெருக்கடியை போக்கும் வகையில் இலவசங்கள் வேண்டாம் என கூறியுள்ளோம். இதன்மூலம் அரசுக்கு செலவு மிச்சமாகும்.
இந்த நிதியில் ஏழைகளுக்கு வழங்கும் 20 கிலோ அரிசியை 50 கிலோ அரிசியாக உயர்த்திவழங்க வேண்டும். முதியோர் பென்ஷன் நிதியையும் உயர்த்திவழங்க வேண்டும். தொடர்ந்து கட்சிசார்பில் வசதிபடைத்தவர்கள் இலவசங்களை விட்டுதரக்கோரி வேண்டுகோள் விடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.