சி.பி.ஐ. அரசின் கைப்பாவையாக செயல்படுகிறதா?

மோடி அரசாங்கத்தில் வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. அரசின் கைப்பாவையாக செயல்படுகிறதா?எதிர்க்கட்சிகளை வேட்டையாடுகிறதே! அன்று தமிழகத்திலும் இன்று கர்நாடகாவிலும் ஏன் இப்படி அமளி துமளி பண்ணுகிறார்கள்?

எந்தக் காலத்தில் இரண்டு நிறுவனங்களும் யோக்கியவான்களாக நடந்து கொண்டிருக்கின்றன? ஒரு கட்டத்தில் சி.பி.ஐ. தலைமை அதிகாரி சில பிரச்சனைக்குரிய மனிதர்களை அதிகாரத்தில் இருக்கும் போதே சந்தித்திருக்கிறார். ரஞ்சித் சிங் என்று நினைக்கிறேன். அவர் இப்போது ஓய்வு பெற்று விட்டார்.

எல்லா காலத்திலும் இது நடந்திருக்கிறது.

அடுத்து மோடி தொலைநோக்காளர் என்று அடிக்கடி சொல்லி வருகிறேன். அதில் ஒன்று செல்லாக்காசு.அந்த திட்டம் கொண்டு வந்த நாள் முதல் இன்னும் எதிர்பார்க்கும் அளவுக்கு அதில் வெற்றியை ஈட்ட முடியாவிட்டாலும், பல கோடிக்கணக்கான ரூபாய் எளிதாக சிக்கியபடி உள்ளது.

அதே வருமான வரி துறை தான். அதே சி.பி.ஐ.தான். அதே அமலாக்கப் பிரிவு தான். ஆனால் இப்போது எல்லோருக்கும் ஒருங்கிணைந்த தகவல்கள் எளிதாக கிட்டுகின்றன. ஏதோ ஒரு இடத்தில் சிக்கி விடுகிறார்கள்.

நான் 2 லட்சம் ரூபாய் சம்பாதித்ததாக தாக்கல் செய்து விட்டு அடுத்து இந்த செல்லாக்காசு சமயத்தில் 10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்திருந்தால் கணக்கு எளிதாக என்னால் சொல்ல முடியுமோ? இப்போது அந்த வேலை தான் நடக்கிறது. சுமார் 5 லட்சம் கணக்குகளை அவர்கள் டெபாசிட் செய்த தொகையோடு ஒப்பிட்டு பார்க்கிறார்கள்..

ஆக அதில் சிக்கிக் கொண்டது தான் பெங்களூரூ சமாச்சாரம். காங்கிரஸ், பெங்களூருக்கு தங்கள் குஜராத் எம்.எல்.ஏக்களை கடத்திச் செல்வது நியாயமென்றால், இதுவும் நியாயம் தான்.

இன்னொரு விஷயம்.. தமிழகத்திலும் ஒரு பெரிய புள்ளி சிக்கக் கூடும். அது தமிழக அரசியலில் திடீர் மாற்றம் கொண்டு வரலாம் என்பது கூடுதல் தகவல்.

சரி. அப்படியானால் பாரதிய ஜனதா ஊழலே செய்யவில்லையா என்று கேட்கலாம். அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.காங்கிரஸ் ஆட்சியில் அப்படி ஒன்றும் பாரதிய ஜனதா தலைவர்கள், அமைச்சர்கள் சிக்கியதாக எனக்கு நினைவில்லை..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.