சி.பி.ஐ. அரசின் கைப்பாவையாக செயல்படுகிறதா?

மோடி அரசாங்கத்தில் வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. அரசின் கைப்பாவையாக செயல்படுகிறதா?எதிர்க்கட்சிகளை வேட்டையாடுகிறதே! அன்று தமிழகத்திலும் இன்று கர்நாடகாவிலும் ஏன் இப்படி அமளி துமளி பண்ணுகிறார்கள்?

எந்தக் காலத்தில் இரண்டு நிறுவனங்களும் யோக்கியவான்களாக நடந்து கொண்டிருக்கின்றன? ஒரு கட்டத்தில் சி.பி.ஐ. தலைமை அதிகாரி சில பிரச்சனைக்குரிய மனிதர்களை அதிகாரத்தில் இருக்கும் போதே சந்தித்திருக்கிறார். ரஞ்சித் சிங் என்று நினைக்கிறேன். அவர் இப்போது ஓய்வு பெற்று விட்டார்.

எல்லா காலத்திலும் இது நடந்திருக்கிறது.

அடுத்து மோடி தொலைநோக்காளர் என்று அடிக்கடி சொல்லி வருகிறேன். அதில் ஒன்று செல்லாக்காசு.அந்த திட்டம் கொண்டு வந்த நாள் முதல் இன்னும் எதிர்பார்க்கும் அளவுக்கு அதில் வெற்றியை ஈட்ட முடியாவிட்டாலும், பல கோடிக்கணக்கான ரூபாய் எளிதாக சிக்கியபடி உள்ளது.

அதே வருமான வரி துறை தான். அதே சி.பி.ஐ.தான். அதே அமலாக்கப் பிரிவு தான். ஆனால் இப்போது எல்லோருக்கும் ஒருங்கிணைந்த தகவல்கள் எளிதாக கிட்டுகின்றன. ஏதோ ஒரு இடத்தில் சிக்கி விடுகிறார்கள்.

நான் 2 லட்சம் ரூபாய் சம்பாதித்ததாக தாக்கல் செய்து விட்டு அடுத்து இந்த செல்லாக்காசு சமயத்தில் 10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்திருந்தால் கணக்கு எளிதாக என்னால் சொல்ல முடியுமோ? இப்போது அந்த வேலை தான் நடக்கிறது. சுமார் 5 லட்சம் கணக்குகளை அவர்கள் டெபாசிட் செய்த தொகையோடு ஒப்பிட்டு பார்க்கிறார்கள்..

ஆக அதில் சிக்கிக் கொண்டது தான் பெங்களூரூ சமாச்சாரம். காங்கிரஸ், பெங்களூருக்கு தங்கள் குஜராத் எம்.எல்.ஏக்களை கடத்திச் செல்வது நியாயமென்றால், இதுவும் நியாயம் தான்.

இன்னொரு விஷயம்.. தமிழகத்திலும் ஒரு பெரிய புள்ளி சிக்கக் கூடும். அது தமிழக அரசியலில் திடீர் மாற்றம் கொண்டு வரலாம் என்பது கூடுதல் தகவல்.

சரி. அப்படியானால் பாரதிய ஜனதா ஊழலே செய்யவில்லையா என்று கேட்கலாம். அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.காங்கிரஸ் ஆட்சியில் அப்படி ஒன்றும் பாரதிய ஜனதா தலைவர்கள், அமைச்சர்கள் சிக்கியதாக எனக்கு நினைவில்லை..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.