தொழிலாளர் தங்குமிட திட்டத்திற்கு அனுமதி தந்தவர் மோடி

‘பிரதமர் மோடி தான் தொழிலாளர் தங்குமிட திட்டத்திற்கு அனுமதி அளித்தா[ர்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக அரசின், ‘சிப்காட்’ நிறுவனம் சார்பில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்காக, காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில், 18,720 படுக்கைகளுடன் தங்குமிடம் கட்டப்பட்டு உள்ளது.

இதை, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.

அவர் தன், ‘எக்ஸ்’ தளத்தில், ‘இந்தியாவிலேயே முதல் முறையாக, பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்கும் மெகா திட்டத்தை திறந்து வைத்துள்ளோம்’ என, குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், குறைந்த விலையில் வாடகைக்கு தங்குமிட வளாகம் கட்டும் திட்டம், 2020 ஜூலையில் துவக்கப்பட்டது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் சென்னையில் தங்குமிட திட்டமானது, 2021 செப்டம்பரில், பிரதமர் மோடியால் தமிழகத்துக்கு அனுமதிக்கப்பட்ட ஐந்து திட்டங்களில் ஒன்று.

ஸ்ரீபெரும்புதுார் வல்லம் வடகாலில், 707 கோடி ரூபாய் செலவில், 18,720 படுக்கைகள் உடைய தங்குமிட திட்டத்திற்கு, மத்திய அரசின் மானியம், 37.44 கோடி ரூபாய்.

பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து, 498 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. இதை, முதல்வர் ஸ்டாலின் அறிந்திருப்பார் என்று உறுதியாக நம்புகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.