தொழிலாளர் தங்குமிட திட்டத்திற்கு அனுமதி தந்தவர் மோடி

‘பிரதமர் மோடி தான் தொழிலாளர் தங்குமிட திட்டத்திற்கு அனுமதி அளித்தா[ர்’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக அரசின், ‘சிப்காட்’ நிறுவனம் சார்பில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்காக, காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில், 18,720 படுக்கைகளுடன் தங்குமிடம் கட்டப்பட்டு உள்ளது.

இதை, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.

அவர் தன், ‘எக்ஸ்’ தளத்தில், ‘இந்தியாவிலேயே முதல் முறையாக, பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்கும் மெகா திட்டத்தை திறந்து வைத்துள்ளோம்’ என, குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், குறைந்த விலையில் வாடகைக்கு தங்குமிட வளாகம் கட்டும் திட்டம், 2020 ஜூலையில் துவக்கப்பட்டது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் சென்னையில் தங்குமிட திட்டமானது, 2021 செப்டம்பரில், பிரதமர் மோடியால் தமிழகத்துக்கு அனுமதிக்கப்பட்ட ஐந்து திட்டங்களில் ஒன்று.

ஸ்ரீபெரும்புதுார் வல்லம் வடகாலில், 707 கோடி ரூபாய் செலவில், 18,720 படுக்கைகள் உடைய தங்குமிட திட்டத்திற்கு, மத்திய அரசின் மானியம், 37.44 கோடி ரூபாய்.

பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து, 498 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. இதை, முதல்வர் ஸ்டாலின் அறிந்திருப்பார் என்று உறுதியாக நம்புகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...