அயோத்தியில் முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்கிறார்கள், இங்கே இருப்பவர்களுக்கு என்ன?

அயோத்தியில், ராமர் கோவிலை கட்டிக் கொள்ளலாம்' என ஷியா வாரியம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததைது பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியதாவது.

''இந்த வழக்கு 1948-ல் இருந்தே தொடங்கி விட்டது. சம்பந்தப் பட்ட இடத்தில் ராமர்சிலை வைத்து வழிபாடு தொடங்கிய அந்தக் காலகட்ட த்திலேயே அதற்கு எதிர்ப்புதெரிவித்து வழக்கு தொடுத்தவர்கள் ஷியா வக்ப் போர்டுதான். 

2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூட, 'இந்த இடத்தில் கோவில் இருந்தது. அதை நீக்கித் தான் மசூதி கட்டப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்கள். சம்பந்தப்பட்ட இடத்தில்,  ராமஜென்ம பூமி நியாஸ் அமைப்பு மற்றும் அங்கே இருந்த கோவில் டிரஸ்டி என 2 பாகம் இந்துக்களுக்கு. 3-வது பாகம் ஷியா வக்ப் போர்டுக்கு. ஒரிஜினலாக வழக்குதொடுத்ததே ஷியா வக்ப் போர்டுதான். எனவே, சன்னி இஸ்லாமியருக்கு இதில் சம்பந்தமே கிடையாது. 'நியாயமான தூரத்தில் மசூதியைக் கட்டிக் கொள்கிறோம்' என்று ஷியா தரப்பினரே சொல்லிவிட்டனர். 

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சிசெய்து, ஏற்கெனவே அங்கே கோவில் இருந்ததை உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள். இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கிலும்கூட 2 இந்து நீதிபதிகளும் சேர்ந்து கொடுத்திருக்கும் தீர்ப்பில், 'கோவிலை இடித்து அதன் மீது  கட்டப்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்கள். மற்றொரு இஸ்லாமிய நீதிபதியோ, 'கோவில் இடித்த இடிபாடின் மீது கட்டப்பட்டுள்ளது'  என்று குறிப் பிட்டுள்ளார். அதாவது 'இடித்துக்கட்டியது' என்ற வார்த்தையை தவிர்த்திருக்கிறார். எனவே, அங்கே ஏற்கெனவே கோவில்தான் இருந்தது என்பதை 3 நீதிபதிகளுமே ஒப்புக்கொள்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரையில், அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி முழுவதுமே இந்துக்களுக்குச் சொந்தம். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பில் 3-வது பாகம் ஷியாவக்ப் போர்டுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர்களும் கூட, 'நாங்களே இந்த இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு நகர்ந்து விடுகிறோம்' என்று சொல்லி விட்டதால், ஒட்டுமொத்தமாக வழக்கே முடிவுக்கு வந்துவிடுகிறது. 


2004-லேயே இந்த முடிவைக் கிட்டத்தட்ட நாங்கள் நெருங்கினோம். அதாவது ஒரிஜினல் வழக்குதா ரர்களான ஷியா பிரிவினர் அப்போதே விட்டுக்கொடுக்கத் தயாராகவே இருந்தார்கள்.  ஆனால், அப்போது வாஜ்பேயி அரசு தேர்தலில் தோற்றுப் போனதால், தீர்வு கிடைக்காமல் போனது. சுருக்கமாகச் சொன்னால், அயோத்தியில் உள்ள முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்கத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், மதவெறியைத் தூண்ட நினைப்பவர்கள் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்'' என்று வெடித்து முடித்தார் ஹெச்.ராஜா!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...