வக்ப் வாரிய பிரச்சனையில் சிக்கிய 1800 வருடம் பழமை வாய்ந்த கோவில் – நிர்மலா சீதாராமன்

வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்த விவாதத்தின் மீது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தின் திருச்செந்துறை கிராமத்தில் நடந்த நிகழ்வை மேற்கோள் காட்டி பேசினார். இப்பிரச்னையில் சிக்கிய 1,800 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் குறித்து அவர் குறிப்பிட்டார்.

வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் ராஜ்யசபாவில் நடந்து வருகிறது.

அப்போது நிர்மலா சீதாராமன் பேசியதாவது: தமிழகத்தில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்திரசேகர சுவாமி கோவில் உள்ளது. இங்கு தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் இங்கு வாழ்ந்து வந்தனர். 408 ஏக்கர் நிலம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இது எப்படி பிரச்னைக்கு உள்ளானது? இக்கிராம மக்கள், தங்களுக்குள் நிலங்களை வாங்கும் போதும், விற்பனை செய்யும்போதும், வக்ப் வாரியத்திடம் தடையில்லா சான்று பெற்று வர வேண்டும் என அவர்களிடம் தெளிவாக கூறப்பட்டது.

டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக, மாவட்ட கலெக்டர் தவறான தகவல்களை பதிவு செய்ததால், முழுகிராமமும் தவறான பதிவில் சேர்க்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கிராமவாசியும் தனது நிலம் தொடர்பாக ஏதேனும் செய்ய வேண்டி இருந்தால், அதற்கு வக்ப் வாரியத்திடம் தடையில்லா சான்று பெற வேண்டுமா?

விஷயம் உண்மையாக இருந்தும், அதிகாரி தவறாக பதிவு செய்ததால், கிராம மக்கள் ஏன் அங்கு வருகிறார்கள், தங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என வக்ப் வாரியத்தால் கூற முடியாதா?ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. ஏழை மக்கள் தலைமுறை தலைமுறையாக அங்கு வசிக்கும்போதும், அந்த நிலம் வேறு ஒருவருக்கு சொந்தமானது எனக் கூறிக் கொண்டே இருந்தார்கள். கோவிலின் நிலை என்ன? வக்ப் வாரியத்தால் கோவில் கட்டப்பட்டதா? இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

கடந்த 2022ம் ஆண்டு திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள திருச்செந்துறை கிராமம் முழுதும் தமிழக வக்ப் வாரியம் தனக்கு சொந்தமானது எனக் கூறியது பிரச்னை ஆனது. இது குறித்து மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், கிராம மக்கள், வக்ப் வாரிய அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நர ...

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்த ...

அடுத்த தேர்தலில் தோல்வியடைந்தால் தி.மு.க., ஆட்சி என்பதே இருக்காது: நயினார் நாகேந்திரன் ஆரூடம் “வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வீழ்த்தி விட்டால், இனி ...

நாட்டின் பாரம்பரியத்தை பிரதிப ...

நாட்டின்  பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் சேனல் தூர்தர்ஷன் – மத்திய இணை அமைச்சர் ''நாட்டின் பொருளாதாரத்தில், படைப்பு பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது,'' என, ...

போதை பொருள் விற்பனையில் தமிழகம ...

போதை பொருள் விற்பனையில்  தமிழகம் முதலிடம் – எ ச் ராஜா தமிழகத்தில் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனையாகிறது. கஞ்சா மூடைகள் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன் ...

2026 தேர்தலில் திமுக அவுட் ஆப் கன்ட்ரோல் – நயினார் நாகேந்திரன் ''2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தமிழகத்தில் இருந்து அவுட் ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமு ...

குற்றங்களை மூடி மறைக்கும் திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீரைக் கூட வழங்க ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...