ஜி.எஸ்.டி., பொரு­ளா­தா­ரத்­தில், மிகப்­பெ­ரிய சாத­க­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும்

இந்­திய பொரு­ளா­தார மந்தநிலை தற்­கா­லி­க­மா­னதே தவிர, அந்­நாடு, ஜி.எஸ்.டி., அறி­மு­கம் கார­ண­மாக, சிறப்­பான வளர்ச்சி காணும்,’’ என, உலகவங்கி தலை­வர், ஜிம் யங் கிம் தெரி­வித்து உள்­ளார்.

அமெ­ரிக்க தலை­ந­கர், வாஷிங்­ட­னில், பன்­னாட்டுநிதி­யம் மற்­றும் உலகவங்­கி­யின் ஆண்டு பொதுக்­கூட்­டம் நடை­பெற உள்­ளது. இதில் பங்­கேற்கவந்த, ஜிம் யங் கிம், இந்­தியா குறித்து, செய்­தி­யா­ளர்­கள் கேட்ட கேள்­விக்கு பதில் அளித்­தார்.

அதன் விப­ரம்: பிர­த­மர் மோடி, இந்­தி­யா­வின் வர்த்­த­கச் சூழலை மேம்­ப­டுத்த, தீவிர முயற்சி மேற்­கொண்டு வரு­வதை, உலக வங்கி உன்­னிப்­பாக கவ­னித்து வரு­கிறது. மோடி எடுத்துவரும் நட­வ­டிக்­கை­கள் அனைத்­தும், நல்ல பயனை அளிக்­கும் என, எதிர்­பார்க்­கி­றோம். நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டின், ஏப்., – ஜூன் வரை­யி­லான, முதல் காலாண்­டில், இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி, 5.7 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.

இது, நாடுவளர்ச்சி பாதை­யில் சென்று கொண்­டி­ருக்­கும்போது ஏற்­பட்ட, சிறிய பிறழ்வு போன்ற போக்கு தான். ஜி.எஸ்.டி., அறி­மு­கத்­தால், நாடு, தற்­கா­லிக இடர்ப்­பா­டு­களை சந்­தித்­துள்­ளது. இதன்விளை­வாக, பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் தொய்வு ஏற்­பட்­டுள்­ளது. ஜி.எஸ்.டி., நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தில், மிகப்­பெ­ரிய அள­வில், சாத­க­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும். அத­னால், வரும்மாதங்­களில், பொரு­ளா­தார சுணக்­கம் சரி­யாகி விடும்.

நடப்பு நிதி­யாண்­டில், பொரு­ளா­தார வளர்ச்சி ஸ்தி­ர­மாக இருக்­கும். தனிப்­பட்டமுறை­யில், என்னை பொறுத்­த­ வரை, பிர­த­மர் மோடி, கிடைத்த வாய்ப்­பு­களை பயன்­ப­டுத்தி, இந்­தியமக்­கள் அனை­வ­ரை­யும் முன்­னேற்ற வேண்­டும் என்­ப­தில், உறு­தி­யாக உள்­ளார். ஆனால், இந்­தியா ஏரா­ள­மான சவால்­களை எதிர்­ நோக்கி உள்­ளது. கல்வி, ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறை­களில், சற்றுமுன்­னேற்­றம் காணப்­ப­டு­கிறது. எனி­னும், பெரும்­பான்மை நாடு­களை போல, இத்­து­றை­களில், இந்­தியா இன்­னும் அதிக முன்­னேற்­றம் காண வேண்­டும்.

:
பிர­த­மர் மோடி, அர­சி­யல் கொள்கை மற்­றும் உறு­திப்­பாடு குறித்த தன்நிலையை, ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மும் தெளி­வாக வெளிப்­ப­டுத்தி உள்­ளார். அவர், அதை எப்­படி செயல்­ப­டுத்­து­கி­றார் என்­பதை, உலகவங்கி ஆரா­யும். அதன் அடிப்­ப­டை­யில், உலக வங்கி, எந்த அளவு முடி­யுமோ, அந்த அள­விற்கு, ஆக்­க­பூர்­வ­மான பங்­க­ளிப்பை, இந்­தி­யா­விற்கு விரைந்துவழங்­கும்; இந்­தி­யா­வின் மனி­த­வள ஆற்­றலை மேம்­ப­டுத்த துணைபுரி­யும்.

சுகா­தார பிரச்­னை­க­ளுக்கு, மோடி அளித்துவரும் முக்­கி­யத்­து­வம் பாராட்­டத்­தக்­கது. அவ­ரது தலை­மை­யில், மிகச் சிறப்­பாக செயல்­ப­டுத்­தப்­பட்டு வரும் திட்­டங்­களில் ஒன்­றான, ‘துாய்மை இந்­தியா’ மிகச்சிறந்த திட்­ட­மா­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...