டெங்கு காய்ச்சலைத் தமிழக அரசு உடனடியாகக் கட்டுப்படுத்தவேண்டும்'' எனத் தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக பி.ஜே.பி. சார்பில், சென்னை டி.பி.சத்திரம் அருகே உள்ள காமராஜர்நகரில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நில வேம்புக் கஷாயம் வழங்கிப்பேசிய டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், ''தமிழகத்தில் டெங்குகாய்ச்சல் அதிகமாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் டெங்குகாய்ச்சல் மற்றும் விஷக்காய்ச்சல் இருக்கிறது. தமிழக அரசு இதை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். சாதாரண மருத்துவ மனைகளில் கூட காய்ச்சல் வார்டுகளைத் தொடங்கவேண்டும்.
தனியார் மருத்துவ மனைகளிலும் டெங்குகாய்ச்சல் மற்றும் விஷக்காய்ச்சல் வார்டுகள் தொடங்கப்பட வேண்டும். தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறினாலும், இப்போது உள்ள நோயின் வீரியத்துக்குப் போதுமானதாக இல்லை. டெங்குகாய்ச்சலுக்கு சுகாதாரமின்மையே காரணம். உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததே டெங்குகாய்ச்சல் அதிக அளவில் பரவக்காரணம். டெங்குக் காய்ச்சலை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொண்டு வரவேண்டும். பொதுமக்களும் காய்ச்சல்வந்தால் இரண்டு மூன்று நாள்களில் குணமாகிவிடும் என்று இருந்துவிடாமல், ஆரம்ப நிலையிலேயே அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும்'' என்றார்.
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.