முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை

”முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து பேசி மாநில பிரச்னைளை விவாதித்து முடிவெடுக்க வேண்டும்,” என, தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னரும், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் பொங்கல் விழா நேற்று நடந்தது. விழாவில், பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். நிருபர்களுக்கு, தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி:

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பரிசை அதிகமாக கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியவர், முதல்வர் ஸ்டாலின். தற்போது பொங்கல் பரிசு கொடுக்க முன்வராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.,வை, அனைத்து கட்சிகளும் புறக்கணித்துள்ளன.

கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே கருத்து மோதல் தொடர்கிறது. இதுபோன்ற கருத்து வேற்றுமைகள் மாநில மக்களுக்கு பலன் தராது என்பதால், இருவரும், தங்களது வேற்றுமைகளை மறந்து, மாநில பிரச்னைகளை பற்றி விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.

தெலுங்கானாவில், சந்திரசேகரராவ் முதல்வராக இருந்த போது, பிரதமர் மோடி வந்தால் அவரை வரவேற்க வரமாட்டார். முதல்வர் ஸ்டாலினை போலவே, மத்திய அரசின் திட்டங்களையும், சந்திர சேகரராவ் எதிர்த்து வந்தார். அதனால் தான், இன்று அவர் வீட்டில் இருக்கிறார்.

மத்திய அரசின் திட்டங்களை, தமிழக அரசு மறுப்பது நல்லதல்ல. துணை வேந்தரை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் ஒரு வரைவை கொடுத்திருக்கிறார்.

இந்த வரைவு வருவதற்கு முன்பே, அதை சட்டமாக்கிவிட்டதை போல, தமிழக அரசு நாடகமாடுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., டிபாசிட் வாங்காது என அமைச்சர்கள் கூறுவதை பற்றி, நாங்கள் கவலைப்பட போவதில்லை. தேர்தலில் பா.ஜ., போட்டியை ஏற்றுக்,கொள்ளும் தகுதி, தி.மு.க.,வுக்கு இல்லை.

தி.மு.க.,வில் நேர்மையான போர் வீரர்களே இல்லை. முதுகில் குத்துபவர்களாக உள்ளனர். ஈ.வெ.ரா., சமூக சீர்த்திருத்தவாதி இல்லை என பா.ஜ., தலைவர்கள் ஏற்கனவே பலமுறை பதிவு செய்துள்ளனர். தற்போது சீமானும் பதிவு செய்வது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...