கர்மா உங்கள் செயல்களுக்கு எதிர் வினையாற்ற தவறுவது இல்லை

ஸ்டாலின் 30 வருஷமா முதல்வர் கனவிலும்… சசிகலா 30 வருசமா முதல்வர் கனவிலும் இருந்தார்கள்… ஆனால்…  ஓபிஎஸ், ஈபிஎஸ் முதல்வர்கள் ஆகி பிரபலமாகி விட்டார்கள்… எம்ஜிஆர், அண்ணாதுரை, காமராஜர் எதிர்பாராத நிலையில் மரணித்தார்கள் பிரபலமாக இருக்கும்போதே… ராஜீவும், பிரபாகரனும் தங்கள் பிரபல்யம் சறுக்கும் போது மரணித்தார்கள் இன்னொருவரால்…

 

ஈவேரா விநாயகர் சிலையை கல் என கூறி தூக்கி ஏறிந்தார்…  ஆனால்… சிறுநீரகத்தில் உருவான கல்லை கூட தூக்கி எறிய முடியாமல் சிறுநீர் கழிக்க கூட சிரமப்பட்டு சிறுநீரை சுமக்க வாளியோடு சுற்றினார்…

 

ஜெயலலிதா சிறைக்கு போகனும்னு கருணாநிதியும்…. கருணாநிதி அழியணும் என்று ஜெயலலிதாவும் நினைத்தார்கள்…ஆனால் கண்ணுக்கு எட்டிய வரை எதிரியே இல்லை என்ற ஜெயலலிதா இறந்துவிட்டார். பிறகு குற்றவாளி என அறிவிக்கவும் பட்டார்.

ஆனால்.. கருணாநிதி விருப்பப்படி ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு எந்தவொரு கருத்தும் சொல்ல இயலவில்லை கருணாநிதியால்…93 வயதிலேயே நூறாண்டு கொண்டாட்ட ஆசை கருணாநிதிக்கு… 

அது நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது… ஆனால் அதை உணரும் நிலையில் கருணாநிதி இருப்பாரா என உறுதியாக சொல்ல முடியாது…. மெத்த படித்த மன்மோகன் சிங், சோனியாவின் கருத்துக்கு பொம்மையாய் ஆட … . ஏதோ படித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு தெற்கு ஆசியாவே ஆடுகிறது…

 

உலகமே தங்களுக்கு கட்டுப்படணும்னு நினைக்கும் வெளிநாட்டு முஸ்லிம்கள் நாளுக்கு நாள் தங்களுக்குள்ளேயே சிதறுகிறார்கள். உயிர் வாழமட்டுமே சிதறி ஓடிய யூதர்கள் ஒருங்கிணைகிறார்கள்.விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தையே அடக்கி ஆள முயல்கிறார்கள்… ஆனால் பூமி நாளுக்கு நாள் மனித வாழ்வுக்கு உகந்த நிலையில் இருந்து விலகிச் செல்கிறது.

 

கர்மா… 

உங்களுக்கு எதிராக வினையாற்றுவதில்லை… உங்கள் செயல்களுக்கு எதிர் வினையாற்ற தவறுவதும் இல்லை. உங்கள் செயல்களுக்கான பலனை ஏதோ ஒருவடிவில் உங்களிடம் சேர்த்துவிடும் மிகச் சிறந்த நிர்வாகிதான் கர்மா.

யாரை அலட்சியம் செய்கிறோமோ அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வருகிறது. பாலமும்… சுவரும் கட்டிடத் தொழிலாளர்களால் தான் கட்டப்படுகிறது.. சுவர் பிரிக்கிறது… பாலம் இணைக்கிறது. கேடு செய்ய யாருக்கு நினைக்கிறோமோ அதே கேடு நமக்கே வருகிறது. கொஞ்ச நாள் வாழும் வாழ்க்கையில் தீமையை அகற்றுவோம்.

நன்மையை விதைப்போம். நல்லவர்களே!… நல்ல சிந்தனையோடு நாலு பேருக்கு உதவுங்கள். அதுதான் தர்மம் காக்கும் நல் அரசியல். கெட்டவன் தானே தன் அழிவை தேடிக்கொள்வான். அவனோடு உங்களை கொஞ்சம் கூட ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...