வசமாக சிக்கிய சசிகலா தரப்பு

அதிமுக பொதுசெயலாளர் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதர வாளர்கள் வீடுகளில் நடத்தப்படும் வருமான வரி சோதனை யானது கடந்த சிலமாதங்களுக்கு முன்னரே அதிகாரிகளால் திட்டமிட்டி ருந்ததாக கூறப்படுகிறது. 

வரிஏய்ப்பு,அன்னிய செலாவணி மோசடிபுகார் தொடர்பாக தினகரன் குடும்பத்திற்கு சொந்தமான ஜெயா டி.வி, ஜாஸ் சினிமாஸ், நமது எம்.ஜி.ஆர் உள்ளிட்ட இடங்களில் காலை முதல் வருமான வரித்துறையினர் குடைந்து குடைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இது முழுக்க முழுக்க அரசியல் பின்னோக்கம் கொண்டது.தினகரனின் செயல்பாடுகளை முடக்குவதற்காக மத்திய பா.ஜ.க அரசு மேற்கொண்ட ரெய்டு என்பதை பா.ஜ.க மறுத்துள்ளது.

சென்னை மட்டுமின்றி  பெங்களூர், மன்னார்குடி, கூடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 190 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல் முறையாக 190 இடங்களில் அதுவும் ஒரேநேரத்தில் சோதனை நிகழ்த்துவது என்பது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.

ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் அலுவலகங்கள், ஜாஸ் சினிமாஸ், தினகரனுக்கு சொந்தமான புதுவை அருகே உள்ள ஆரோவில் பண்ணை வீடு, திவாகரனுக்கு சொந்தமான மன்னார்குடி கல்லூரி மற்றும் வீடு, விவேக்கின் வீடு, இளவரசியின் மகள் கிருஷ்ணப் பிரியாவின் வீடு, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவக் குமாரின் வீடு என ஏராளமான இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெறுகிறது.

 

மொத்தம்190 இடங்களில் ஒரேநேரத்தில் நடத்தப்படும் இந்த சோதனையில்,1500 முதல் 2000 அதிகாரிகள் ஈடுபடுத்தப் பட்டனர்.இதற்காக வெளி மாநிலங்களில் இருந்தும்  அதிகாரிகள் வரவழைக்கப் பட்டுள்ளனர்.

அதிமுகவின் பொதுசெயலாளர் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவா ளர்கள் வீடுகளில் வருமான வரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பது கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அதிகாரிகள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்தவாரம் நடைபெறுவதாக இருந்த இந்த ரெய்டு சிலகாரணங்களுக்காக சற்று தாமதமாக இன்று நடைபெறுகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...