மோடிக்கு கடல் நீர் சுத்திகரிப்பு வாகனம் பரிசாக வழங்கும் இஸ்ரேல் பிரதமர்

தமது இந்திய சுற்றுப் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திரமோடிக்கு கடல் நீரை குடிநீராக்கும் வாகனத்தை பரிசாக வழங்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள ஓல்கா கடற்கரையில் அமைந்துள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவுடன் இணைந்து நரேந்திரமோடி பார்வையிட்டார். கடல் நீரை குடிநீராக்கும் ஜீப்பில் பயணம் செய்தபடியே, அவர்கள் அந்தசுத்திகரிப்பு நிலையத்தை பார்வை யிட்டனர்.

இந்த வாகனத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட நரேந்திர மோடி, அதுகுறித்து நெதன்யாகுவிடம் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். சிறிய ரகஜீப் போன்ற வடிவமைப்புடன் இருக்கும் இந்த வாகனமானது, நாளொன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் கடல்நீரை மிகவும் தூய்மையான குடிநீராக சுத்திகரிப்பு செய்யும் திறன்படைத்தது. அதேபோல், நாளொன்றுக்கு 80 ஆயிரம் லிட்டர் அளவுகொண்ட மண் மாசுகளுடன் கூடியநீரை இந்த வாகனத்தால் சுத்திகரிப்பு செய்ய முடியும்.

தமது இஸ்ரேல் சுற்றுப்பயணத்துக்குப் பின்னர் இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, இந்தசுத்திகரிப்பு வாகனத்தின் தொழில்நுட்பம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து பதிவிட்டிருந்தார். வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில், இந்தவாகனத்தின் அவசியம் குறித்தும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் ஜன.14 முதல் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, நரேந்திர மோடிக்கு அந்தவாகனத்தை பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தவாகனம், இந்திய மதிப்பில் ரூ.70 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...