இஸ்ரேல் -காசா விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இஸ்ரேல் பிரதமரிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, நேற்று தொலை பேசி வாயிலாக பிரதமர் மோடியிடம் பேசினார். அப்போது 78 சுதந்திர தின வாழ்த்துக்களை இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார்.
தொடர்ந்து மேற்காசியாவின் தற்போதைய நிலவரம் ,இஸ்ரேல் -காசா போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு பிரதமர்களும் விவாதித்தனர்.
இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது, இஸ்ரேல் – காசா இடையே போர் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர வேண்டும், அனைத்து பிணை கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு மோடி வலியுறுத்தினார்.
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |