இஸ்ரேல் -காசா விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இஸ்ரேல் பிரதமரிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, நேற்று தொலை பேசி வாயிலாக பிரதமர் மோடியிடம் பேசினார். அப்போது 78 சுதந்திர தின வாழ்த்துக்களை இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார்.
தொடர்ந்து மேற்காசியாவின் தற்போதைய நிலவரம் ,இஸ்ரேல் -காசா போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு பிரதமர்களும் விவாதித்தனர்.
இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது, இஸ்ரேல் – காசா இடையே போர் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர வேண்டும், அனைத்து பிணை கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு மோடி வலியுறுத்தினார்.
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |