2019-ம் ஆண்டுக்குள், 80% கங்கை நதி சுத்தம் செய்யப்படும்

இந்தியாவின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்றாக அறியப்படும் கங்கைநதியின் தற்போதைய நிலைமை அனைவரும் அறிந்ததே! நதியைச் சுத்தம்செய்து, பழைய நிலைக்குக் கொண்டுசெல்ல நிறுவப்பட்ட திட்டமே நமாமி கங்கைத்திட்டம் (Namami Gange Programme). இதன் தற்போதைய நிலையை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்காரி பகிர்ந்து கொண்டார். அதன்படி, 2019-ம் ஆண்டுக்குள், 80% கங்கை நதி சுத்தம் செய்யப்படும் என்று தெரிவித்தார். முதற்கட்டமாக, கங்கை நதிக்கு மாசு ஏற்படுத்தும் முதல் 10 நகரங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், இதில் கான்பூர் நகரத்துக்குத் தான் முதலிடம் என்றும் விளக்கினார்.

“உத்தரப் பிரதேச அரசிடம் சிலகோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். இதன்படி சர்க்கரை  ஆலைகள், காகிதத் தொழிற்சாலைகள் மற்றும் பிற தொழில்துறை வளாகங்களில் இருந்துவரும் கழிவுகள் கங்கை நதிக்குள் சென்று கலக்கக்கூடாது. இத்தகைய கழிவு நீர் கலப்புதான் கங்கையின் தற்போதைய நிலைக்கு மிகமுக்கிய காரணம். இந்த நமாமிகங்கை திட்டம் சற்றேசவாலான திட்டம்தான். கங்கை நதி பலநகரங்களைத் தொட்டுச் செல்வதால், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையில் மாசு இருக்கிறது. இதைச் சரிசெய்ய, நாம் கொண்டு வந்துள்ள திட்டங்கள் அனைத்தும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பானில் நிலவும் ஆற்று மாசுபாடு குறைப்பு நடவடிக்கைகள் குறித்து நன்கு ஆராய்ந்தபின்னரே வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத்திட்டத்துக்காக பிரத்தியேகமாக 2,200 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்பம் கொண்டே இந்தத்திட்டம் உயிர்பெற்றுள்ளது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...