மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்- எதிர்பார்ப்புகள் அதிகரிப்பு

மத்திய பட்ஜெட்டில் வரிவிதிப்பில் தனிநபர்களுக்கான வருமானவரி வரம்பில் சலுகை, வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான அம்சங்கள், விவசாய கடன் தள்ளுபடிக்கான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முழுமையான கடைசி பட்ஜெட்டை வியாழக்கிழமை காலையில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி சமர்ப்பிக்க இருக்கிறார். கடந்த 2005 – 2006 ஆம் ஆண்டுடன் கைவிடப்பட்ட தனி நபர்களுக்கு நிலையான வரிவிதிக்கும் நடைமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. தனிநபர் வருமானவரி வரம்பு தற்போது உள்ள இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருமானவரி விலக்குக்குரிய மருத்துவச் செலவுத்தொகை தற்போதுள்ள 15 ஆயிரம் ரூபாய் என்ற வரம்பில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி தற்போதுள்ள 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயத்தை மேம்படுத்துவதற்கென உத்தரவாதத்துடன் கடன் வழங்குவதற்கான நிதியை அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

விவசாயிகளின் சுமையை போக்கும் வகையில் குறிப்பிட்ட அளவிலான கடன் தள்ளுபடி, பயிர்க் காப்பீடுத் திட்டங்களுக்கான தொகையை அதிகரித்தல் போன்ற அறிவிப்புகளைச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. சிறு, குறு நீராதார திட்டங்கள், புதிய அணைகள், கால்வாய்கள் குறித்த அறிவிப்புகளும் இடம் பெற வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. விவசாய உற்பத்திப் பொருள்களை இருப்பு வைப்பதற்கான குளிர்பதன கிடங்குகளை அதிகரித்தல், உரமானியம் போன்ற அறிவிப்புகளும் இடம்பெறக்கூடும் எனத் தெரிகிறது.

டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் அறிவிக்கப்பட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொலைத் தொடர்பு சேவைக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் எதிர்பார்க்கப் படுகிறது. ரியல் எஸ்டேட்டுக்கான ஜிஎஸ்டி வரி தற்போது நிர்ணயிக்கப் பட்டுள்ள 12 சதவீதத்தில் இருந்து மேலும் குறைக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.

இயற்கை எரிவாயுவுக்கான ஜிஎஸ்டியை குறைக்கவும் மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக கூறப்படுவதால், சமையல்சிலிண்டரின் விலையில் மாற்றமிருக்கலாம் எனத்தெரிகிறது. தங்க இறக்குமதிக்கான வரியை 10 சதவீதத்தில் இருந்து 2.4 சதவீதமாக குறைத்து அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...