ராகுல் நாட்டிடம் மன்னிப்புகேட்க வேண்டும்

கர்நாடக சட்ட சபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் பிரசாரகூட்டம், பந்த்வால் என்ற இடத்தில் நேற்று  நடைபெற்றது. இந்தகூட்டத்தின் தொடக்கத்தில் பள்ளி குழந்தைகளை பொதுக்கூட்ட ஏற்பாட்டாளர்கள் ‘வந்தே மாதரம்’ தேசபக்தி பாடலை பாடவைத்து உள்ளனர்.

 

அப்போது ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணு கோபாலிடம் தன் கைக்கெடிகாரத்தை காட்டி, இன்னும் பலநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டிய நிலையில் நேரம் ஆகிவிட்டதை சுட்டிக்காட்டினார், அவர் உடனே குழந்தைகளை ‘வந்தே மாதரம்’ பாடலை பாதியிலேயே நிறுத்த வைத்ததார். இதுபெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் முரளிதர ராவ், பெங்களூருவில் நிருபர்களிடம் பேசுகையில் சாடினார்.

‘‘காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் நீண்டகாலமாக சுதந்திர இயக்கத்தின் மரபுகளை இழந்து, சுதந்திர போராட்ட வீரர்களின் மரபுகளை மறந்துவிட்டனர். நேற்று இரவு பந்த்வாலில் நடந்த நிகழ்ச்சி, இதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. ராகுல்காந்தி தேசிய பாடலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தையும் அவமதித்துவிட்டார். அவர் நாட்டிடம் மன்னிப்புகேட்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...