மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள்
இருக்கலாம்….. அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்….

அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்….ஆனால்,
இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது…..

20 ஆயிரம் பேர் கொண்ட மக்கள் திரளில் வன்முறையைத் தூண்ட 20 பேர் போதும்….அந்த 20 பேரின் தூண்டுதலில்உற்சாகம் அடைந்த ஒரு200 பேர் —
அது வளர்ந்து 200 என்று போராட்ட களத்தைரணகளம் ஆக்கிவிட முடியும்…..

முதலில் வன்முறையை தூண்டிய 20 பேரும் அடுத்து தொடர்ந்த 200 — 2000 பேரும்
இப்படி நடந்து கொள்ள போகிறார்கள் என்று போராட வந்த மக்களுக்கு தெரிந்து இருக்கும் என்றும் சொல்ல முடியாது….

நடந்த வன்முறை சம்பவங்களில் ஒரு தனித்துவம் தெரிகிறது… மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களைத் தாக்குவது… ஆலையின் குடியிருப்பை தாக்குவது… தீயிட்டு கொளுத்துவது… எல்லாம் சராசரி பொதுமக்கள்
நடத்தும் போராட்டங்களில் காண முடியாதவை …..

அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களில் கூட வன்முறை சம்பவங்கள் நிகழ்வது உண்டு… அது பஸ்களின் மீது கல்லெறிவதாகவே இருக்கும்.! அரசு அலுவலகங்களை தீயிட்டு கொளுத்த முயற்சிப்பது

அதன் மூலம் அரசு எந்திரத்தை தூண்டி பதில் தாக்குதலை நடத்தச் செய்வது போன்ற வன்முறைகளை – அரசியல் கட்சிகளின் போராட்ட முறைகளில்
எளிதாக பார்க்க முடியாது! ஜனநாயக ஆட்சி முறையை ஏற்காதவர்கள் தான்
இப்படி பட்ட வன்முறையை நடத்துவது வழக்கம்….

மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த அலை பிரச்சினையை முன்னெடுத்து மக்களை வழி நடத்தி இருந்தால் அரசுக்கு அழுத்தம் தந்து சுமூகமாகவே தீர்வு கண்டிருக்க முடியும்.

ஆனால்,அரசியல் கட்சிகளின் தளத்தை சிறு குழுக்கள் ஆக்கிரமிக்கும் போக்கு
தமிழகத்தில் அதிகரித்து வருகிறது…. இந்த குழுக்கள் தாமாக இயங்குகின்றனவா
அல்லது வேறு யாருக்காவது இயங்குகின்றனவா என்பது பற்றிய தகவல் மத்திய- மாநில அரசுகளிடம் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை!

கட்டுக்கடங்காத கூட்டமும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையும் துப்பாக்கி சூடு நடத்த காரணமாகி இருக்கிறது…… போலிஸார் மீது தாக்குதல் நடத்தி ஓட ஓட விரட்டப்பட்டதை காண முடிகிறது….. இதை ஒரு சாகசமாக பார்ப்பதை விட
கேவலம் எதுவும் இல்லை!

துப்பாக்கிச் சூடு நடத்தப்படாமல் இருந்தால் அசம்பாவிதத்தின் அளவு அதிகமாக விரிவடைந்து இருக்க வாய்ப்பு உண்டு… ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையை
தனியாகவும் இன்றைய போராட்டத்தின் பின்னணியை தனியாகவும் பிரித்து பார்க்க வேண்டும்!

ஏற்பட்டு இருக்கும் உயிர் இழப்புகளை சர்வ சாதாரணமாக கடந்து சென்று விட அரசு முயற்சிக்கக் கூடாது! மக்களும் அதை அனுமதிக்கக் கூடாது! இந்த உயிர் இழப்புகளை அரச கொலைகள் என்ற விமர்சனம் இனி கிளம்பும்…. அதைக் கண்டு அஞ்சி மாநில அரசு தற்காப்பு வாதங்களை முன் வைப்பதில் கவனம் செலுத்தாமல்

போராட்ட வன்முறையை வடிவமைத்தவர்கள் யார் என்று மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்! சிறந்த- திறம்பட்ட அரசு நிர்வாகத்திற்கு அது தான்
அடிப்படை தகுதி… அந்த தகுதி தனக்கு இருப்பதாக காட்ட எடப்பாடி பழனிச்சாமி
தலைமையிலான அரசுக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது…..

நன்றி வசந்த பெருமாள்

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...