மாநிலங்களவையின் அலுவல் விதிகளில் திருத்தம் செய்யப் படுவது தொடர்பான இடைக்கால அறிக்கையை அடுத்தமாதத்துக்குள் ஆய்வுக்குழு சமர்ப்பிக்கும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக்மனு சிங்வி எழுதிய 'ஸ்டிரெய்ட் டாக்' என்ற ஆங்கில புத்தகத்தின் வெளியீட்டு விழா தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
மாநிலங்களவை அலுவல்கள் சுமுகமாக நடைபெறுவதை உறுதிப் படுத்தும் நோக்கில், அதுதொடர்பான அலுவல் விதிகளில் திருத்தம்செய்வது தொடர்பாக ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க குழு ஒன்றை நியமித்திருக்கிறேன். அந்த குழு தனது இடைக்கால அறிக்கையை அடுத்தமாதத்துக்குள் தாக்கல்செய்யும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் வெங்கய்ய நாயுடு.
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.