ஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அவரதுதந்தை கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய் இருவரும் ஒன்றாக கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்ற சுவாரசியவரலாறு குறித்து காணலாம்.

இந்திய மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், மறைந்த முன்னாள் பிரதமரும் ஆன வாஜ்பாய், 1946-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள டி.ஏ.வி. கல்லூரியில் சேர்ந்து எம்.ஏ., அரசியல் அறிவியல் துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார்.

பின்னர் 1948-ம் ஆண்டு அதே கல்லூரியில் வாஜ்பாயும், அவரது தந்தையும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான கிருஷ்ண பிகாரி வாஜ்பாயும் சேர்ந்து ஒன்றாக சட்டம்பயின்றனர். டி.ஏ.வி. கல்லூரி விடுதியின் 104வது அறையில் இருவரும் சேர்ந்து தங்கியவாறு கல்லூரிக்கு சென்றனர். தந்தை, மகன் இருவரும் ஒன்றாக வகுப்புக்குசெல்வது இருவருக்கு உள்ளேயும் சங்கடத்தை ஏற்படுத்த, இனி ஒன்றாக வகுப்புக்கு செல்ல வேண்டாம் என இருவரும் முடிவெடுத்தனர். அதன்படி வாஜ்பாய் திங்கள் கிழமை வகுப்புக்கு சென்றால், அவரது தந்தை செவ்வாய்க்கிழமை வகுப்புக்குசெல்வார்.

தந்தை, மகன் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே கல்லூரியில் படிப்பது அப்போதைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரிய பேச்சுப் பொருளாக இருந்தது என்று டி.ஏ.வி. கல்லூரியின் முதல்வர் மனவேந்திரா ஸ்வர்ப் கூறியுள்ளார்.

மேலும் இணை-பேராசிரியர் விஜய் பிரதாப்சிங் கூறுகையில், அரசியல் அறிவியல்துறையின் தலைவர் மதன் மோகன் பாண்டேவுடன், வாஜ்பாய் மிகவும் நெருக்கமாக இருந்தார். வாய்பாய் எப்போதும் அவரை குருஜி என்றே அழைப்பார். வகுப்புகள் முடிந்தபிறகு, அவரது வீட்டிற்கு சென்று ஏராளமான சமூகபிரச்சனைகள் குறித்து அவருடன் ஆலோசனை செய்வார் என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...