நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

 நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, திட்டமிட்ட உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும்.
அப்படி செய்தால்,

இரத்தத்தில் சர்க்கரையை ஒரே சீரான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.

இரத்தத்தில் கொழுப்பின் அளவை – (கொலஷ்ட்ராலின் அளவைக்) கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்.

உடல் எடை கூடாமல்-(பருமனாக ஆகி விடாமல்) வைத்துக் கொள்ள முடியும்.

இவற்றின் காரணமாக, நீரிழிவுநோயால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தடுக்க முடியும்.

தவிர்க்க வேண்டியன
நீரிழிவுநோய் உள்ளவர்கள் முக்கியமாகத் தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:
கொழுப்பு உணவுகள்
உணவில் எண்ணெய் சேர்த்துக் கொள்வது.
சர்க்கரை-இனிப்பு வகைகள்.
மது அருந்துவது.
மாமிச உணவுகள் குறிப்பாக பன்றி, மாடுகளின் இறைச்சி உணவுகள்.
எண்ணெய்யில் பொறித்த, வறுத்த உணவு வகைகள்

காரட், பீட்ரூட், வாழைப்பழம், உருளைக்கிழங்கு ஆகியன

சேர்த்துக் கொள்ள வேண்டியன.

நாள்தோறும் பச்சைக் காய்கறிகளை நிரம்பச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவில் நார்ச்சத்துள்ளவை, கொட்டை வகைகள் போன்றவற்றையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மீன் வகைகளில் புரதச்சத்து (புரோட்டீன்) அதிகம் இருக்கிறது. எனவே மீன் வகைகளை வறுத்து, பொரித்து அல்லது வேறு வடிவில் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது சர்க்கரையின் அளவு இரத்தத்தில் குறைகிறது.

சிக்கன் எனப்படும் கோழிக்கறியும் இதைப் போன்றே பயன் தருவதாக உள்ளது.

இவற்றைப் பயன்படுத்தும் வேளைகளில், இவற்றில் பயன்படுத்தும் எண்ணெயைப் போதுமான அளவு அல்லது குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்.

நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...