நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

 நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, திட்டமிட்ட உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும்.
அப்படி செய்தால்,

இரத்தத்தில் சர்க்கரையை ஒரே சீரான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.

இரத்தத்தில் கொழுப்பின் அளவை – (கொலஷ்ட்ராலின் அளவைக்) கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்.

உடல் எடை கூடாமல்-(பருமனாக ஆகி விடாமல்) வைத்துக் கொள்ள முடியும்.

இவற்றின் காரணமாக, நீரிழிவுநோயால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தடுக்க முடியும்.

தவிர்க்க வேண்டியன
நீரிழிவுநோய் உள்ளவர்கள் முக்கியமாகத் தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:
கொழுப்பு உணவுகள்
உணவில் எண்ணெய் சேர்த்துக் கொள்வது.
சர்க்கரை-இனிப்பு வகைகள்.
மது அருந்துவது.
மாமிச உணவுகள் குறிப்பாக பன்றி, மாடுகளின் இறைச்சி உணவுகள்.
எண்ணெய்யில் பொறித்த, வறுத்த உணவு வகைகள்

காரட், பீட்ரூட், வாழைப்பழம், உருளைக்கிழங்கு ஆகியன

சேர்த்துக் கொள்ள வேண்டியன.

நாள்தோறும் பச்சைக் காய்கறிகளை நிரம்பச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உணவில் நார்ச்சத்துள்ளவை, கொட்டை வகைகள் போன்றவற்றையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மீன் வகைகளில் புரதச்சத்து (புரோட்டீன்) அதிகம் இருக்கிறது. எனவே மீன் வகைகளை வறுத்து, பொரித்து அல்லது வேறு வடிவில் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது சர்க்கரையின் அளவு இரத்தத்தில் குறைகிறது.

சிக்கன் எனப்படும் கோழிக்கறியும் இதைப் போன்றே பயன் தருவதாக உள்ளது.

இவற்றைப் பயன்படுத்தும் வேளைகளில், இவற்றில் பயன்படுத்தும் எண்ணெயைப் போதுமான அளவு அல்லது குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்.

நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமை ...

முதல்வரும், கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும் : முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை ''முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிற ...

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா வரவேற்பு இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அத ...

இந்தியா வந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரெத்தினம் இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துக்கு, ஜனாதிபதி ...

விண்வெளியில் சரித்திரம் படைத் ...

விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் 'டாக்கிங்' செயல்முறை வெற்றி ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...