ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை பா.ஜனதாவினால் மட்டுமே தர முடியும்

மனித உரிமைகள் கழகத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரிமாநில, மாவட்ட, ஒன்றிய, நகரநிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. இதற்கு தலைவர் சுரேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் பழனி வரவேற்றார்.

 

இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

 

அனைத்து கிராமங்களுக்கும் மின்இணைப்பு வழங்கப்பட்டு, இந்தியாவை மின் மிகை மாநிலமாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார். வங்கியில் கணக்குதொடங்க வேண்டும் என்றால் சிறியதொகை டெபாசிட் செய்ய வேண்டும். ஆனால் பணம் எதுவும் டெபாசிட் செலுத்தாமல் வங்கிகணக்கு இல்லாத அனைவருக்கும் வங்கி கணக்கு இன்றைக்கு தொடங்கப்பட்டுள்ளது.

 

திறன்மேம்பாட்டு பயிற்சி 1 கோடிபேருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க ஒருநபருக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு பிணை எதுவும் தேவையில்லை. ஆனால் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன் பெற பிணை தேவைப்படுகிறது.

 

இத்திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் அதிக கடன்பெற்றுள்ளனர். இவற்றை எந்த அரசியல் கட்சியினராவது பேசியது உண்டா?. அதுவும் 70 சதவீதம் கடன் பெற்றவர்கள் பெண்கள் தான். வீடு இல்லாதவர்களுக்கு 2022–ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை மத்தியஅரசு செயல்படுத்தி வருகிறது.

 

1 கோடியே 10 லட்சம் பேர் எரிவாயு மானியத்தை விட்டுகொடுத்துள்ளனர். இந்த மானியத்தின் மூலம் 8 கோடி குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி செய்த சாதனைகளை சொல்லிக் கொண்டே செல்லலாம்.

 

பா.ஜனதா, ஒவ்வொரு வீடுகளிலும், ஒவ்வொரு வருடைய இதயத்திலும் இருக்கக் கூடிய கட்சி. உங்கள் குடும்பம் முன்னேற்றம் அடைய, உங்கள் குழந்தைகளின் எதிர் காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் பா.ஜனதாவுக்கு தான் ஆதரவுகொடுக்க வேண்டும். ஊழலற்ற, நேர்மையான, வளர்ச்சிக்கான ஆட்சியை பா.ஜனதாவினால் மட்டும் தான் தர முடியும்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

One response to “ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை பா.ஜனதாவினால் மட்டுமே தர முடியும்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...