அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூட்டுறவுத்துறைக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்படும்-அமித்ஷா

குஜராத் மாநிலம் காந்திநகரில், 102-வது சர்வதேச கூட்டுறவு தினத்தையொட்டி நேற்று  (06-07-2024) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சஹகர் சே சம்ரித்தி’ (கூட்டுறவின் மூலம் வளம்) என்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், கூட்டுறவு அமைச்சகச் செயலர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கூட்டுறவுத்துறையுடன் தொடர்புடைய அனைத்து மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பல வழிகளில் இன்று மிகவும் முக்கியமான நாள் என்று மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறினார். இந்த நாளில்தான் பிரதமர் நரேந்திர மோடி கூட்டுறவுத்துறைக்குத் தனி அமைச்சகத்தை உருவாக்கியதாக அவர் கூறினார். தனி அமைச்சகம் வேண்டும் என்ற கோரிக்கைக்கு முந்தைய அரசுகள் ஒருபோதும் செவிசாய்த்ததில்லை என்றும் நரேந்திர மோடி பிரதமரான பிறகுதான், கூட்டுறவுத் துறைக்குத் தனி அமைச்சகத்தை நிறுவினார் என்றும்  அமித் ஷா கூறினார்.

கூட்டுறவு என்பது இந்தியாவில் ஒரு புதிய சிந்தனை அல்ல என்றும், நமது முன்னோர்கள் 125 ஆண்டுகள் பழமையான இந்தக் கொள்கையைப் பின்பற்றி வந்துள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார். விவசாயக் கடன் விநியோகம், சர்ககரை உற்பத்தி போன்றவற்றில் கூட்டுறவுத்துறை முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார். கிராமப்புற மற்றும் வேளாண் பொருளாதாரத்தில் கூட்டுறவுத்துறை மிக முக்கியமான பங்களிப்பை அளித்து வருவதாகவும் அவர் கூறினார். அடுத்த 5 ஆண்டுகளில் கூட்டுறவுக்கான வலுவான அடித்தளம்  அமைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கூட்டுறவுத்துறைக்காக மத்திய கூட்டுறவு அமைச்சகம் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று  அமித் ஷா கூறினார். நாட்டில் மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியம் இல்லாத எந்த மாவட்டமும் இருக்கக்கூடாது என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இதைச்செய்வதன் மூலம் மட்டுமே கூட்டுறவுத்துறையை விரிவுபடுத்தி, ஒவ்வொரு கிராமப்புற மற்றும் ஏழை நபரையும் வளமாக மாற்ற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.  இன்றும் கூட நாட்டில் 2 லட்சம் பஞ்சாயத்துகளில் ஒரு கூட்டுறவு நிறுவனம் கூட இல்லை என்று அவர் கூறினார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த இரண்டு லட்சம் பஞ்சாயத்துகளில் தொடக்க வேளாண் கடன் சங்கங்களை உருவாக்க இலக்கு நிர்ணயித்து பணியாற்றுவதாக அவர் எடுத்துரைத்தார்.

2029 -ம் ஆண்டில் சர்வதேச கூட்டுறவு தினம் கொண்டாடப்படும் நாளில், பிஏசிஎஸ் எனப்படும் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம் இல்லாத ஒரு பஞ்சாயத்து கூட நாட்டில் இருக்காது என்று திரு அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்கவும், ஏழைகளுக்கு சேவை செய்ய கூட்டுறவு அமைப்புகளை முன்னெடுத்துச் செல்லவும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர்  அமித் ஷா கேட்டுக் கொண்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...