மதுரையில் எய்ம்ஸ் அமைவது உறுதி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்த சிக்கலும் இல்லை தாமதம்  ஏன்? தமிழக  பாஜக மாநில தலைவர் Dr.தமிழிசை சௌந்தராஜன் விளக்கம்.

           சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த ஏழுபது ஆண்டுகள் பெரும்பாலும் காங்கிரஸ்  ஆட்சி செய்த காலங்கள் சேர்த்து இந்தியா  முழுவதும்  9  இடங்களில் மட்டுமே  எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில்  பிரதமர் மோடி அவர்களின் அரசு புதிதாக பதினான்கு இடங்களில் எய்ம்ஸ்  மாதிரி மருத்துவமனைகள் உயர்சிகிச்சைக்கு நாடு முழுவதும் அமைய கொள்கை முடிவு எடுத்து செயலாற்றி வருவதனால் அதில் ஏற்கனவே புதிதாக பத்து இடங்களில் திட்டம் செயலுக்கு வந்து மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மீதமுள்ள இடங்களில் புதிதாக அமைக்க பெரும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

       மதுரை  தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனை அமைய  மத்திய மாநில அரசுகள் முழுவீச்சில் செயலாற்றி வருகின்றன. மாநில அரசின் சுகாதாரத்துறை பிற துறைகளுடன்  இணைந்து சுற்றுச்சுழல் வருவாய்த்துறை ,நெடுஞசாலைத்துறை, போக்குவரத்துத்துறை இவற்றுடன் விரிவான திட்ட அறிக்கைகள் அரசு நிர்வாக நடைமுறைப்படி படிப்படியாக பெற்று கோப்புகள் தயாரிக்கப்பட்டு விரைவுப்பணிகள் நடைபெற்று  வருகின்றது. மதுரை  தோப்பூரில் அடையாளங்காணப்பட்ட இடத்தின் நடுவே பெட்ரோலிய துறையின் பெட்ரோல் குழாய்கள்  மாற்றியமைக்க ஏற்பாட்டுக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றது.

      சுமார் 1500 கோடிக்கான மிகப்பெரிய திட்டம் என்பதால் இவை அனைத்தும் அரசு முறைப்படியும் வடிவைமைக்கப்படும் முறையாக தயார் செய்யது மத்திய, மாநில  அரசுகள் இணைந்து சுமூகமாக செயலாற்றி வருகிறார்கள். இதன் நிறைவு வடிவமே மத்திய அமைச்சரவை கூடி நிதி ஒதுக்கி இறுதியில் அதற்கான ஆணைகள் வரும் என்பது உறுதி. அதுவரை ஆகும் கால அவகாசம் இயற்கையானதுதான். தாமதம் என்பது  கருவுற்ற தாய் குழந்தை பிறக்க 10 மாதம் காத்திருக்க வேண்டுமல்லவா அதுபோலத்தான் இந்த கால அவகாசம்.

     சமீபத்தில் நடந்த பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் கூட நம் பாரத பிரதமர்   முன்னிலையில் மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மாதிரி மருத்துவமனை அமைய உள்ளதற்கு நான் நன்றி தெரிவித்து உரையாற்றினேன்.

       தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட சகோதரர் கூட இந்த அறிவுப்பு அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது  என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆனால் அதன்பிறகு ஏன்  ஓப்புதல் ஆணை  இல்லை என்று கேட்டிருக்கிறார். கட்டிட ஒப்பந்தம்  யாருக்கு வழங்க பட்டிருக்கிறது?  கருவுற்ற பின்புதான் குழந்தை  பிறக்க 10 மாதம் இயல்பான கால அவகாசம்  தேவை அதுபோலத்தான் இதுவும்.ஆனால் கருவுற்றபின் 3 மாதத்திலேயே குழந்தை ஏன் பிறக்கவில்லை   என்று கேள்வி எழுப்புவது எப்படி சாத்யமில்லையோ அதுபோலத்தான் நிதி ஒதுக்கவில்லை என்பதும் என்னை பொறுத்தவரை தமிழக பாஜக சார்பில் எங்களது முயற்சிக்கு தொடர்ந்து முயற்சி செய்வது மட்டுமல்லாமல் தொடர்ந்து அதற்கான வழிமுறைகளையும் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து கண்காணித்தும்,பின்பற்றியும் வருகிறது என்பதை தெரிவித்துகொள்கிறேன்.

மதுரையில் எய்ம்ஸ் அமைவது  உறுதி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...