மோடி அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பு மிக்க சாதனை செய்துள்ளது

திருச்சி தூயவளனார் கல்லூரியின் 175-வது ஆண்டு விழா மற்றும் திருச்சி என்.ஐ.டி.யில் உற்பத்தி மையம் திறப்புவிழா இன்று நடைபெற்றது.


இதில் பங்கேற்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று காலை திருச்சிவந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சியில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இங்குவந்துள்ளேன். திருச்சி தேசிய தொழில் நுட்ப வளாகத்தில் (என்.ஐ.டி.) இந்தியாவிலேயே முதன்முறையாக ரூ.190 கோடியில் உயர் ஆய்வுமையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரேவளாகத்தில் 13 ஆய்வக கூடங்கள் அமைக்கப் பட்டுள்ளது சிறப்பாகும். இது என்ஜினீயரிங் கல்வி மேம்பாட்டுக்காக மட்டுமல்லாது, தொழிற்சாலை திறன் மேம்பாட்டையும் ஊக்குவிக்கும்.
 

இதைத்தொடர்ந்து திருச்சி ஜோசப் கல்லூரி 150-வது ஆண்டு விழாவிலும் பங்கேற்கிறேன். மத்திய நரேந்திரமோடி அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பு மிக்க சாதனை செய்துள்ளது. இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைவிட, மோடி ஆட்சியில் 2 மடங்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 

பொது மக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கியாஸ் இணைப்பு உள்ளிட்ட திட்டங்கள் முன்பு இருந்ததைவிட கடந்த 4 ஆண்டுகளில் 2 மடங்கு கூடுதலாக நிறைவேற்றப் பட்டுள்ளது.

தற்போது பெட்ரோல்- டீசல் விலை ரூ.5 வரை குறைக்கப்பட்டுள்ளது பொது மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஒருலிட்டருக்கு ரூ.2.50 பைசா குறைத்துள்ளது. பாஜக ஆளும் 13 மாநிலங்களில் அந்தமாநில அரசுகளும் லிட்டருக்கு ரூ.2.50 பைசா குறைத்துள்ளது. இதன் மூலம் ரூ.5 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு சிறப்புவாய்ந்த சாதனைகளை செய்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...