காசர்கோடு முதல் சபரிமலை ரதயாத்திரை

சபரிமலை பக்தர்களை கைது செய்யும் கேரள இடசதுசாரி கூட்டணி அரசை கண்டித்து காசர்கோடு முதல் சபரிமலைவரை ரத யாத்திரை நடத்தப்போவதாக பாஜக அறிவித்துள்ளது.

சபரிமலையில் போராட்டம் நடத்திய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இது வரை கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும், 400க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்து கேரள அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. கேரளாவில் போராட்டம் நடத்திவரும் பாஜகவினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தலைவர் அமித்ஷா நேற்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

கண்ணூரில் பாஜக புதிய அலுவலகத்தை திறந்துவைத்தார். இதைதொடர்ந்து திருவனந்தபுரம் சென்ற அவர் பல்வேறு நிகழச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறியதாவது:

‘‘கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசும், முதல்வர் பினராயிவிஜயனும் சபரிலை விவகாரத்தில் பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைகின்றனர். மதநம்பிக்கைக்கு எதிராக செயல்படும் அவர்களுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். சபரிமலை விவகாரம் தொடர்பாக இதுவரை 4 ஆயிரம்பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள அரசின் கொடூர மனப்போக்கையே இதுகாட்டுகிறது. பக்தர்களுக்கு ஆதரவாக பாஜக தொடர்ந்து போராட்டம் நடத்தும். மாவட்ட தலைநகரங்களில் அக்டோபர் 30-ம் தேதி உண்ணா விரதப்போராட்டம் நடைபெறுகிறது. காசர்கோடு முதல் சபரிமலை வரை பாஜக சார்பில் ரதயாத்திரை நடத்த முடிவு செய்துள்ளோம்’’ எனக் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...