புயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறைக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டி, பேராவூரணி, பட்டுக்கோட்டை  பகுதிகளில் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

பிறகு புயலால் பாதிக்கப் பட்டு அங்குள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் தங்க வைக்கப்பட்டு இருந்த பொது மக்களை  சந்தித்து ஆறுதல்கூறினார்.

இதையடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜாபுயலால் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை விவசாய நிலங்கள் குறிப்பாக தென்னை மரங்கள் மொத்தமாக சாய்ந்துள்ளது.

நெற் பயிர்களும் பாதிக்கப் பட்டுள்ளன. குடிசை வீடுகளும் சேதமாகி உள்ளது. சேதமான வீடுகளை சீரமைக்கும்வரை இந்தமக்களை நிவாரண முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்யவேண்டும். குடிநீர், உணவு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும்.

கஜாபுயல் பாதிப்பு குறித்து மத்திய உள்துறைக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...