கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

 கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

இதன் இலை, பூ, காய், பழம், விதை, வேர், சமூலம் இவையாவும் மருந்தாகப் பயன்படும். இதன் சுவை, கார்ப்பு, வெப்பம் உடையது. இதை உண்டால், கோழையகற்றும். சிறுநீர்ப்பெருக்கும். அகட்டுவாய் அகற்றி, மல நீராக்கும்.

 

இதன் பழம் இருமல், சுவாசம், கபம், பல்லரணை, புடை, நமை, இவைகளைப் போக்கும். பலத்தையும் பசியையுண்டாக்கும்.

 

இதன் இலைச் சாற்றில் அல்லது கியாழத்தில் எண்ணெய் கலந்து காய்ச்சிப் பூசிவர, தலைவலி, கீல்வாதம், அக்குள் நாற்றம் முதலியவை நீங்கும். இதன் இலை ரசத்தில், ஆளிவிதை நெய் சேர்த்துக் காய்ச்சி வெடிப்புகளில் பூச அவை வெகு சீக்கிரத்தில் மாறும்.

 

இதன் பழத்தை குழைய வேக வைத்துக் கடைந்து வடிகட்டி எடுத்த அளவு 4க்கு ஒன்று செய்துதான் எண்ணெயும் சேர்த்துக் காய்ச்சிக் கடுகு திரளவடித்து வைத்துக் கொண்டு, வெண்குட்டித்தின் மீது பூசிவர வெண்மை மறைந்து தேகநிற முண்டாகும்.

இதன் விதைகளை எரித்து அதனின்று எழுகின்ற புகையைப் பிடிக்க பல்வலி நீங்கும். புழுக்கள் சாகும்.

இதன் வேரை முறைப்படிக் கஷாயமிட்டு இதில் திப்பிலி சூரணமும் தேனும் சேர்த்துக் கொடுக்க இருமல் நீர் தோஷம் சுகமாகும்.

 

கண்டங்கத்திரி சமிலம், ஆடாதொடை வகைக்கு ஒரு கைப்பிடி, விஷ்ணுகாந்தி, பற்பாடகம் இரண்டும் சேர்த்து 1 பிடி சீரகம், சுக்கு வகைக்கு 1௦ கிராம் சிதைத்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராக சுண்டக்காய்ச்சி 4 முதல் 6 வரை 100 மி.லி வீதம் சாப்பிட புளுசுரம் நிமோனியா சுரம், மண்டைநீர் ஏற்றக் காய்ச்சல் முதலியன குணமாகும்.

கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி நெருப்பில் போட்டு வாயில் புகும்படி புகைபிடிக்க பல்வலி, பல்அரணை, பல்பூச்சி நீங்கி குணம் உண்டாகும்.

கண்டங்கத்திரி இலையை 1௦ எண்ணிக்கை அளவில் எடுத்து பதமாகக் காய்ச்சி ஒரு கண்ணாடி சீசாவில் வைத்துக் கொண்டு இரவுப் படுக்கப் போகும்போது காலில் தடவிவர பித்த வெடிப்பு குணமாகும்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...