கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

 கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

இதன் இலை, பூ, காய், பழம், விதை, வேர், சமூலம் இவையாவும் மருந்தாகப் பயன்படும். இதன் சுவை, கார்ப்பு, வெப்பம் உடையது. இதை உண்டால், கோழையகற்றும். சிறுநீர்ப்பெருக்கும். அகட்டுவாய் அகற்றி, மல நீராக்கும்.

 

இதன் பழம் இருமல், சுவாசம், கபம், பல்லரணை, புடை, நமை, இவைகளைப் போக்கும். பலத்தையும் பசியையுண்டாக்கும்.

 

இதன் இலைச் சாற்றில் அல்லது கியாழத்தில் எண்ணெய் கலந்து காய்ச்சிப் பூசிவர, தலைவலி, கீல்வாதம், அக்குள் நாற்றம் முதலியவை நீங்கும். இதன் இலை ரசத்தில், ஆளிவிதை நெய் சேர்த்துக் காய்ச்சி வெடிப்புகளில் பூச அவை வெகு சீக்கிரத்தில் மாறும்.

 

இதன் பழத்தை குழைய வேக வைத்துக் கடைந்து வடிகட்டி எடுத்த அளவு 4க்கு ஒன்று செய்துதான் எண்ணெயும் சேர்த்துக் காய்ச்சிக் கடுகு திரளவடித்து வைத்துக் கொண்டு, வெண்குட்டித்தின் மீது பூசிவர வெண்மை மறைந்து தேகநிற முண்டாகும்.

இதன் விதைகளை எரித்து அதனின்று எழுகின்ற புகையைப் பிடிக்க பல்வலி நீங்கும். புழுக்கள் சாகும்.

இதன் வேரை முறைப்படிக் கஷாயமிட்டு இதில் திப்பிலி சூரணமும் தேனும் சேர்த்துக் கொடுக்க இருமல் நீர் தோஷம் சுகமாகும்.

 

கண்டங்கத்திரி சமிலம், ஆடாதொடை வகைக்கு ஒரு கைப்பிடி, விஷ்ணுகாந்தி, பற்பாடகம் இரண்டும் சேர்த்து 1 பிடி சீரகம், சுக்கு வகைக்கு 1௦ கிராம் சிதைத்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராக சுண்டக்காய்ச்சி 4 முதல் 6 வரை 100 மி.லி வீதம் சாப்பிட புளுசுரம் நிமோனியா சுரம், மண்டைநீர் ஏற்றக் காய்ச்சல் முதலியன குணமாகும்.

கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி நெருப்பில் போட்டு வாயில் புகும்படி புகைபிடிக்க பல்வலி, பல்அரணை, பல்பூச்சி நீங்கி குணம் உண்டாகும்.

கண்டங்கத்திரி இலையை 1௦ எண்ணிக்கை அளவில் எடுத்து பதமாகக் காய்ச்சி ஒரு கண்ணாடி சீசாவில் வைத்துக் கொண்டு இரவுப் படுக்கப் போகும்போது காலில் தடவிவர பித்த வெடிப்பு குணமாகும்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...