மேற்குவங்கம் ரத யாத்திரைக்கு அனுமதி

மேற்கு வங்கத்தில், 3 ரத யாத்திரைகள் நடத்த பாஜகவுக்கு அனுமதி வழங்கி கொல்கத்தா உயர் நீதிமன்றம் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முகத்தில் கரியை பூசி உள்ளது.

மேலும் மாநிலத்தில் எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமலிருக்க கண்காணிக்க வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக ரதயாத்திரைகள் நடத்த பாஜக திட்டமிட்டு அதற்கான அனுமதியை மாநில அரசிடம் கோரியது. ஆனால், அனுமதி அளித்தால், மதக்கலவரம் உருவாகும் சூழல் ஏற்படும் என்று உளவுத்துறை கூறியதாக காரணங்களை காட்டி அனுமதி அளிக்க மேற்கு வங்க அரசு மறுத்துவிட்டது.

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. அங்கு முதல்வராக மம்தா பானர்ஜி இருந்து வருகிறார். அங்குள்ள 42 தொகுதிகளில் முக்கிய இடங்களில் ரதயாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டு உள்ளது இருக்கிறது.

மாநிலம் முழுவதும் 158 பொதுக் கூட்டங்களும், மூன்று பிரிவுகளாக ரத யாத்திரையைத் தொடங்கவும், 34 நாட்கள் தொடர்ந்து யாத்திரை நடத்தவும் முடிவுசெய்துள்ளது.

இதற்கான முதல்கூட்டத்தை ‘ஜனநாயகத்தைக் காப்போம் பேரணி என்ற பெயரில் கூச் பிஹார் மாவட்டம், சாகர் ஐலாந்து, தராபித் ஆகிய இடங்களில் வரும் 22, 24 மற்றும் 26-ம் தேதிகளில் ரதயாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த ரத யாத்திரையை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில், ரதயாத்திரையை மாநிலம் முழுவதும் நடத்தவும், கூட்டங்கள் நடத்தவும் மேற்குவங்க அரசிடம் பாஜக சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், ஏற்கனவே மேற்குவங்காளத்தில் செல்வாக்குப் பெற்று வரும் பாரதிய ஜனதா, இந்த ரத யாத்திரையால் மேலும் வலுப்பெறும் என்று அஞ்சிய ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தால் ரதயாத்திரை நடக்கும் இடங்களில் பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது, மதக்கலவரம் நடக்க வாய்ப்புள்ளது, ஆதலால், ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று உளவுத்துறை கூறியதாக காரணம் காட்டி அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

இதனை எதிர்த்து மாநில பாஜக சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு, அனுமதி கோரப்பட்டது. இந்த வழக்கின் இறுதிவாதம் இன்று நடந்த நிலையில், பாஜக தரப்பு வழக்கறிஞர்கள் 15 நிமிடமும், அரசு தரப்பில் 10 நிமிடங்களும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதிதபாப்ரதா சக்கரவர்த்தி பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார். அது பின்வருமாறு:

அதில், பாஜக ரதயாத்திரை நடத்த எந்தவிதமான தடையும் விதிக்கமுடியாது. பாஜக ரத யாத்திரை நடத்தலாம். ஆனால், எந்த மாவட்டத்தில் ரத யாத்திரை நடந்தாலும், 24 மணிநேரத்துக்கு முன்பாக, மாவட்ட போலீஸ் எஸ்.பிக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். குறைந்தபட்சம் ரதயாத்திரை மாவட்டத்துக்குள் நுழைவதற்கு 12 மணிநேரத்துக்கு முன்பாக தகவல்தெரிவிக்க வேண்டும்.

பாஜக நடத்தும் ரத யாத்திரை சட்டத்துக்கு உட்பட்டு, எந்தவிதமான வழக்கமான போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ரத யாத்திரைக்குத் தேவையான அனைத்துவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீஸார் செய்துகொடுத்து, சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும்

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...