‘எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு, அனுமதி இல்லை, ஆனால் தி.மு.க.,வின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பா.ம.க., நிறுவனர் அன்புமணி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்து, பா.ஜ., அ.தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது தடையை மீறி போராட்டம் நடத்தியதாக கூறி அவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர். இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், சட்டசபையை கவர்னர் ரவி அவமதித்ததாக கூறி, இன்று (ஜன.,07) தமிழகம் முழுவதும் தி.மு.க., வினர் போராட்டம் நடத்தினர். இதற்கு போலீசார் அனுமதி கொடுத்தது எப்படி என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
தமிழக பா.ஜ., தலைவர், அண்ணாமலை
எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு, அனுமதி இல்லை, ஆனால் திமுகவின் வீண் போராட்டங்களுக்கு அனுமதி உண்டு. ஜனநாயக ரீதியாக, சுவரொட்டிகள் மூலமாகக் கூட எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க அனுமதி இல்லை, ஆனால், கவர்னரையும், எதிர்க்கட்சிகளையும் வசைபாடும் சுவரொட்டிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்களுக்கு தி.மு.க., பாலியல் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாப்பின்மை என, தமிழகம் முழுவதும் திமுகவினர் குற்றங்கள் செய்து கொண்டிருக்க, போலீசார், சுவரொட்டி ஒட்டும் திமுகவினருக்குப் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது. தி.மு.க., ஆட்சியில் தமிழகம், அறிவிக்கப்படாத அவசர நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் மக்கள் இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுரை எழுதுவார்கள்.
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |