அனைவருக்கும் குறைந்தவிலையில் சிகிச்சை

மதுரைவந்த பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான அடிக்கல் நாட்டினார். நெல்லை, மதுரை, தஞ்சாவூரில் மத்திய அரசு உதவியுடன் கட்டப்பட்ட பல் நோக்கு மருத்துவ மனைகளை திறந்து வைத்தார். தபால் துறை மூலம் 12 பாஸ்போர்ட் சேவை மையங்களையும் துவக்கி வைத்தார்.

மதுரை வந்துள்ள அனை வருக்கும் வணக்கம் என தமிழில் உரையை துவக்கிய பிரதமர் மோடி தொடர்ந்து பேசிய தாவது:மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள மதுரைக்குவந்தது மகிழ்ச்சி. நாட்டின் நான்கு திசைகளிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. சுகாதாரதுறையில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சிறந்து விளங்குகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைமூலம் காஷ்மீர் முதல் குமரிமுதல் சேர்ந்தவர்களும் பயன் பெறுவார்கள். 1,200 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட செலவில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை மக்களுக்கு பெரிதும் பலன் தரும். எய்ம்ஸ் அடிக்கல் மற்றும் பல்நோக்கு மருத்துவ மனை திறந்து வைக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த 4.5 ஆண்டுகளில் மருத்துவபடிப்புகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அனைவருக்கும் குறைந்தவிலையில் சிகிச்சை கிடைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் துவக்கி வைத்தது வரலாற்று சாதனை. இந்ததிட்டம் மூலம் 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குகிறது.

இந்திய மக்களுக்கு, உலகதரத்தில் குறைந்தசெலவில் சிகிச்சை கிடைக்க செய்வதே எங்களின் நோக்கம். தமிழகத்தில், 1,320 சுகாதார நிலையங்களை தமிழகம் செயல் பாட்டிற்கு கொண்டுவந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 2023க்குள் காசநோயை ஒழிக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...