ராகுல் காந்தி தன் முகத்தில் தானே சேற்றை பூசிக்கொண்டுள்ளார்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேரம் பேசியுள்ளதாக, மத்திய சட்டத்து றை அமைச்சர் ரவிசங்கர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:

இந்தியா – பிரான்ஸ் இடையே ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பே, இந்த ஒப்பந்தம் தனக்குக் கிடைக்கப்போகிறது என்று தொழிலதிபர் அனில் அம்பானி அறிந்திருந்தார் என்பதை மின்னஞ்சல் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கருக்குக்கூட தெரியாத சில தகவல்கள், ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே அனில் அம்பானிக்குத் தெரிந்திருக்கிறது. இது அரசுப்பணிகள் தொடர்பான ரகசியம்காக்கும் சட்டத்துக்கு எதிரான செயலாகும். இதற்காகவே மோடியை சிறையில் அடைக்கலாம் என்று கூறியிருக்கும் ராகுல், மோடி ஒருவரால்மட்டுமே இந்த ஒப்பந்தம் பற்றி அம்பானியிடம் சொல்லியிருக்க முடியும்.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி தாக்கல்செய்யும் அறிக்கையை நாங்கள் ஏற்கப்போவதில்லை என்றும், அது பிரதமர் மோடி எனும் காவல்காரரின் கணக்கு தணிக்கையாளர் தாக்கல்செய்யும் அறிக்கை.
இவ்வாறு ராகுல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேரம் பேசியுள்ளதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

ராகுலின்பேட்டிக்கு பதிலடி கொடுத்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் மோடிக்கு எதிராக ரஃபேல் போர்விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு வெட்கமற்ற ஒன்றாகும். பொறுப்பற்றதனத்தின் உச்சம். ஐரோப்பிய விமானதயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ்ஸின் மின்அஞ்சல் பரிமாற்றங்கள் குறித்த தகவல்களை ராகுல் காந்தி கையில் வைத்து பேசுகிறார்.
ஒரு நிறுவனத்தின் உள்நிர்வாகம் தொடர்பான மின்அஞ்சல் நகல் ராகுல்காந்திக்கு கிடைத்துள்ளது என்றால், வெளிநாட்டு நிறுவனங்களுடன் ராகுல்காந்தி பேரம் பேசியுள்ளது தெளிவாகத் தெரிய வருகிறது.

பிரதமர் மோடி ராஜதுரோகம் செய்துவிட்டார் என்று ராகுல் கூறியுள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இந்திராகாந்தி குடும்பத்தில் வந்த பிரதமர்களுடன் எங்கள் தலைவர்களுக்கு கூட பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் நாங்கள் ஒருபோதும் யாரையும் ராஜ துரோகம் என்று குற்றம்சாட்டியதில்லை.
இந்த குற்றச்சாட்டினால் ராகுல்காந்தி தன் முகத்தில் தானே சேற்றை பூசிக்கொண்டுள்ளார்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...