தொண்டர்களின் பங்களிப்பால் பாஜக இயங்கவேண்டும்; மற்றவர்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடையால் அல்ல என்று பாஜக தேசியதலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தீனதயாள் உபாத்யாயவின் 51-ஆவது நினைவு தினத்தையொட்டி, தில்லியில் திங்கள் கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
தேர்தல் செலவுகளுக்காக, நாடுமுழுவதும் உள்ள வாக்குச்சாவடி நிலையிலான தொண்டர்கள் இருவர் இணைந்து ரூ. 1000 பணத்தை நமோ செல்லிடப் பேசி வழியாக கட்சிக்கு வழங்க வேண்டும். தேர்தல் நன்கொடை பெறுவதில் நமதுகட்சி நேர்மையாக உள்ளதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
தொழிலதிபதிர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பெறும் நன்கொடையில் இல்லாது, தொண்டர்களின் பங்களிப்பால் பாஜக இயங்குகிறது என்பதை பெருமையுடன் அனைவரிடத்திலும் நாம் கூறவேண்டும்.
நமது வழிகள் நேர்மையாக இல்லா விட்டால், நமது லட்சியங்களை நல்லவழியில் அடைய முடியாது. தொழிலதிபர்கள், ஒப்பந்த தாரர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து நன்கொடையாக பெறும்பணத்திலும், கருப்பு பணத்திலும் கட்சி இயங்கினால், நமது லட்சியங்களை நாம் நேர்மையான வழியில் அடையமுடியாது. நேர்மையான வழியில் எவ்வாறு பயணிப்பது என்பதற்கு மற்றகட்சிகளுக்கு பாஜக வழிகாட்டியாக இருக்கவேண்டும்.
தேர்தல் செலவுகளை எவ்வாறு குறைப்பது மற்றும் அதற்கான நன்கொடையை நேர்மையான வழியில்பெறுவது குறித்து பொது விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கையை அனைத்து கட்சிகளுக்கும் முன்னோடியாக பாஜக தொடங்கவேண்டும்.
அரசியலில் கருப்புபண புழக்கத்தை குறைப்பதற்காக, தேர்தல் செலவுகளுக்காக ரொக்கமாக நன்கொடை பெறுவதை ரூ. 2000-ஆக குறைத்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மோடி ஆட்சியில் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நிதிமோசடியாளர்கள் விஜய் மல்லையா, நீரவ்மோடி உள்ளிட்டோர் மீது மோடி அரசு கடும் நடவடிக்கை எடுத்ததால் தான் அவர்கள் நாட்டை விட்டு தப்பிசென்று விட்டனர் என்று கூறினார்.
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
Leave a Reply
You must be logged in to post a comment.