பாஜகவால் தேசிய கொடிக்கு ஆபத்தல்ல; அதை இறக்க நினைப்பவர் களுக்குதான் ஆபத்து

பாஜகவால் இந்திய தேசிய கொடிக்கு ஆபத்தல்ல; அந்தக் கொடியை இறக்க நினைப்பவர் களுக்குதான் ஆபத்து” என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அல்டாப் தாக்குர் தெரிவித்தார். இந்திய அரசியல்சாசனத்தை பாஜக அழிக்கிறது என்றும், நமது தேசியக் கொடியைகூட பாஜக மாற்றிவிடும் எனவும் மெகபூபா முப்தி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அல்டாப் தாக்குர் இவ்வாறு கூறியுள்ளார்.

காஷ்மீரில் நமது மூவர்ணக்கொடியை ஏற்றவே கூடாது என கங்கனம் கட்டிக் கொண்டிருந்த மெகபூபா முப்திக்கு திடீரென தேசியக் கொடி மீது எப்படி அக்கறைவந்தது? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பாஜகவை கடுமையாக சாடிய மெகபூபா ஸ்ரீநகரில் நேற்றுநடைபெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர் பேசியதாவது: இந்திய மக்களின்தயவால் மத்தியில் ஆட்சியை பிடித்த பாஜக, இன்று அதேமக்களை தங்கள் காலில் போட்டு நசுக்கி வருகிறது. மத்திய அரசு என்ன செய்தாலும் மக்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். அடக்குமுறையை தங்கள் ஆயுதமாக பாஜக கையாண்டுவருகிறது. சர்வாதிகாரத்தால் மக்கள் வெகுநாட்களுக்கு அடக்கிவைக்க முடியாது. அந்த வகையில், பாஜகவின் சர்வாதிகாரமும் விரைவில் முடிவுக்கு வரும்.

காஷ்மீர் அரசியல்சாசனத்தை முற்றிலுமாக அழித்தது போல, இந்திய அரசியல் சாசனத்தை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுவருகிறது. இன்னும் சிறிதுவிட்டால் கூட, நம் முன்னோர்கள் ரத்தம் சிந்தி ஏற்றிய நம் தேசியக்கொடியை தூக்கியெறிந்துவிட்டு, அக்கட்சியின் கொடியான காவிக்கொடியை பறக்கவிட்டு விடும் என மெகபூபா முப்தி பேசினார்.

இந்நிலையில், மெகபூபாவின் இந்தபேச்சு குறித்து ஜம்மு – காஷ்மீர் பாஜக செய்தித்தொடர்பாளர் அல்டாப் தாக்குரிடம் நிருபர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இந்திய தேசியக் கொடியை வெறுத்த, காஷ்மீரில் அந்தக்கொடியை பறக்கவிடக் கூடாது என கங்கனம் கட்டி செயல்பட்ட மெகபூபா முப்தியே இன்று நமது கொடியை பற்றி பேச செய்ததே பாஜகவின் வெற்றியாக கருதுகிறேன். இன்று இந்தியாவில் எட்டுத்திக்கும் மூவர்ணக்கொடி பறப்பதை மெகபூபா முப்தியால் பார்க்க முடியவில்லை. அந்த விரக்தியில் அவர் என்னென்னவோ பேசி வருகிறார்” தேசியக் கொடிக்கு ஆபத்து அல்ல.. இந்திய தேசியக்கொடியை பாஜக மாற்றிவிடும் என மெகபூபா முப்தி கூறியிருக்கிறார். அது அவரதுதனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால் அது நடக்காது. பாஜக என்றுமே இந்தியாவை முதன்மையாக கருதும் கட்சி. பிறகுதான் கட்சிக்கே நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். தேசியக்கொடியை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் கட்சி பாஜக. எனவே, பாஜகவால் தேசியக் கொடிக்கு ஆபத்துவராது. அந்தக் கொடியை இறக்க நினைப்பவர்களுக்குதான் பாஜக ஆபத்தை ஏற்படுத்தும்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...