‛‛ போதை மருந்து இல்லாத நாட்டை உருவாக்குவது நமது அனைவரின் பொறுப்பு” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் போதை மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்தை திறந்து வைத்து அமித்ஷா பேசியதாவது: கடுமையான நடவடிக்கை எடுத்து, போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்கி, பிரதமரின் தீர்மானத்தை நாம் நிறைவேற்றுவது நமது பொறுப்பு. ஒவ்வொரு மாநிலத்திலும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தை உருவாக்குவது நமது இலக்கு.
கடத்தல்காரர்கள் செயற்கை போதை மருந்துகளுக்கு மாறி வருகின்றனர். அதிக தீமை விளைவிப்பதுடன், அதிக விலைக்கும் விற்பனை செய்கின்றனர். போதை மருந்து கடத்தலுக்கு ஒடிசா மற்றும் ஆந்திர கடற்கரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த மாநிலஎல்லை வழியாக கஞ்சா கடத்தப்படுகின்றன. சத்தீஸ்கரில் கஞ்சா பயன்பாடு அதிகளவில் உள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |