25 ஆண்டுகளில் வளர்ச்சிபெற்ற நாடாக மாற்ற மாணவச் செல்வங்கள் உதவவேண்டும்

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சிபெற்ற நாடாக மாற்ற மாணவச் செல்வங்கள் உதவவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தினார்.

சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மத்தியபிரதேச மாநிலத்துக்கு நேற்று முன்தினம் பிரதமர் மோடி சென்றார். குவாலியர் நகரில் உள்ள சிந்தியா பள்ளியின்125-வது நிறுவன தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: குவாலியர் எனக்கு மிகவும் பிடித்த நகரம். அந்நகருக்கு வரும்போது நான் கூடுதல்மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் மாதவராவ் சிந்தியாவின் குடும்பம் நமது நாட்டுக்கு பெரும்பங்காற்றியுள்ளது. நமது நாட்டின் இளைஞர்மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நமது பாரதநாடு நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. குவாலியர் நகரில் உள்ள மாணவர்களுக்கு முழுமையான கல்வியை சிந்தியாபள்ளி வழங்கி வருகிறது.

நாம் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. நமதுநாடு வேகமாக வளர்ச்சி பெற்றுவருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் நமது நாட்டை வளர்ச்சி பெற்றநாடாக மாற்ற மாணவர்கள் உதவவேண்டும். இதற்கான முயற்சியில் மாணவச்செல்வங்கள் ஈடுபட வேண்டும். தரமான கல்வி பயிலும் மாணவர்கள் நமதுநாட்டின் எதிர்காலச் செல்வங்கள் என்பதை அனைவரும் அறிவர். நாட்டின் நலனை மனதில் நிறுத்தி பயிலும் அவர்கள் நாடுவளம்பெற வளமான வழியைக் காட்டுவார்கள்.இளைஞர்கள் மீதும், அவர்களது செயல் திறன்கள் மீதும் நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அடுத்த 25 ஆண்டுகளில் நாடு வளமானநாடாகவும், வளர்ச்சிபெற்ற நாடாகவும் மாற தீர்மானம் செய்துள்ளோம்.

நமது நாடு எடுத்துள்ள தீர்மானத்தை இளைஞர்கள் நிறை வேற்றுவார்கள் என நம்புகிறேன். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவைப் போலவே மாணவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சிந்தியாபள்ளியின் ஒவ்வொரு மாணவரும் வளர்ந்தஇந்தியா என்ற இலக்கை அடைய முயற்சிசெய்ய வேண்டும்.

எனவே, மாணவச் செல்வங்கள் இன்று முதல் ஒருதீர்மானத்தை மனதில் கொண்டு அதை நோக்கி செயல்பட வேண்டும். எடுத்தகாரியத்தை முடிப்போம் என்ற மன உறுதியுடன் மாணவர்கள் நடக்கவேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...