25 ஆண்டுகளில் வளர்ச்சிபெற்ற நாடாக மாற்ற மாணவச் செல்வங்கள் உதவவேண்டும்

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சிபெற்ற நாடாக மாற்ற மாணவச் செல்வங்கள் உதவவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தினார்.

சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மத்தியபிரதேச மாநிலத்துக்கு நேற்று முன்தினம் பிரதமர் மோடி சென்றார். குவாலியர் நகரில் உள்ள சிந்தியா பள்ளியின்125-வது நிறுவன தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: குவாலியர் எனக்கு மிகவும் பிடித்த நகரம். அந்நகருக்கு வரும்போது நான் கூடுதல்மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் மாதவராவ் சிந்தியாவின் குடும்பம் நமது நாட்டுக்கு பெரும்பங்காற்றியுள்ளது. நமது நாட்டின் இளைஞர்மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நமது பாரதநாடு நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. குவாலியர் நகரில் உள்ள மாணவர்களுக்கு முழுமையான கல்வியை சிந்தியாபள்ளி வழங்கி வருகிறது.

நாம் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. நமதுநாடு வேகமாக வளர்ச்சி பெற்றுவருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் நமது நாட்டை வளர்ச்சி பெற்றநாடாக மாற்ற மாணவர்கள் உதவவேண்டும். இதற்கான முயற்சியில் மாணவச்செல்வங்கள் ஈடுபட வேண்டும். தரமான கல்வி பயிலும் மாணவர்கள் நமதுநாட்டின் எதிர்காலச் செல்வங்கள் என்பதை அனைவரும் அறிவர். நாட்டின் நலனை மனதில் நிறுத்தி பயிலும் அவர்கள் நாடுவளம்பெற வளமான வழியைக் காட்டுவார்கள்.இளைஞர்கள் மீதும், அவர்களது செயல் திறன்கள் மீதும் நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அடுத்த 25 ஆண்டுகளில் நாடு வளமானநாடாகவும், வளர்ச்சிபெற்ற நாடாகவும் மாற தீர்மானம் செய்துள்ளோம்.

நமது நாடு எடுத்துள்ள தீர்மானத்தை இளைஞர்கள் நிறை வேற்றுவார்கள் என நம்புகிறேன். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவைப் போலவே மாணவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சிந்தியாபள்ளியின் ஒவ்வொரு மாணவரும் வளர்ந்தஇந்தியா என்ற இலக்கை அடைய முயற்சிசெய்ய வேண்டும்.

எனவே, மாணவச் செல்வங்கள் இன்று முதல் ஒருதீர்மானத்தை மனதில் கொண்டு அதை நோக்கி செயல்பட வேண்டும். எடுத்தகாரியத்தை முடிப்போம் என்ற மன உறுதியுடன் மாணவர்கள் நடக்கவேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...