வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள்

ஜம்மு  காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழகவீரர் சுப்பிர மணியன் உள்பட 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். புல்வாமா மாவட்டம், அவந்தி புராவில், ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், சி.ஆர்.பி.எப் வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீ நகரில் உள்ள முகாமுக்கு வீரர்கள் இந்த வாகனங்களில் சென்றனர்.

 

மொத்தம் 70 வாகனங்கள் அணி வகுத்துச்சென்றன. அப்போது அவர்கள் சென்ற வாகனங்களை குறி வைத்து குண்டுகள் வெடித்தன. அதில் குண்டுவெடித்த வாகனத்தில் இருந்த ஏராளமான வீரர்கள் சிக்கிக் கொண்டனர். பயங்கர தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கேரளா, கர்நாடகாவை சேர்ந்த 2 பேரும் தாக்குதலில் கொல்லப் பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடுமுழுவதும் இந்த தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்… அந்ததாக்குதலில் தமிழக வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தாக்குதலில் பலியாகி உள்ளார். சவலப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சுப்பிரமணியனுக்கு அண்மையில் தான் திருமணம் நிகழ்ந்துள்ளது. தாக்குதல் நிகழ்ந்த அன்று மதியம் தமது குடும்பத்தினருடன் அவர் செல்போனில் பேசியிருக்கிறார். அதன் பிறகு… அவரது செல்போன் அனணத்து வைக்கப்பட்டு இருக்கிறது.

சுப்பிரமணியனுடன், மற்றொரு தமிழகவீரரும் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர்யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் வீர மரணம் அடைந்த மற்றொரு வீரர் அரியலூர் மாவட்டம் கார்க்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நிமிடங்களில் பாக், விமானப்படை த ...

நிமிடங்களில் பாக், விமானப்படை தளங்கள் அழித்ததே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பெருமிதம் சில நிமிடங்களில் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை அழித்தோம், இதுவே ...

பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரத ...

பேச்சுவார்த்தைக்கான பாக்., பிரதமரின் விருப்பத்தை நிராகரித்தது இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்தால் ...

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் வி� ...

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் வரும்: ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவிடம் திரும்பும் நாள் வெகு ...

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்� ...

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு தீவிரம் ; பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு அதிவேகமாக செயல்பட்டு ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...