முன்பு வீரர்களின் தலையை மட்டுமே வெட்டி அனுப்பியவர்கள் இன்று வீரர்களையே அனுப்புகிறார்கள்

கடந்த ஆட்சியில் தங்களிடம் பிடிபட்ட இந்தியவீரர்களின் தலையை வெட்டி அட்டூழியத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான், இப்போது, நமதுவீரரை பத்திரமாக திருப்பி அனுப்பும் அளவுக்கு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோதாவில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கடந்த ஆட்சியில் பாகிஸ்தான் நமது நாட்டு விஷயத்தில் எப்படி நடந்து கொண்டது? இப்போது அதில் எப்படிமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். முன்பு நமது எல்லையில் புகுந்து நமது ராணுவ வீரர்களின் தலையை துண்டிக்கும் அளவுக்கு பாகிஸ்தான் அட்டூழியத்தில் ஈடுபட்டது. ஆனால், இப்போது, தங்களிடம் பிடிபட்ட நமது விமானப் படை கமாண்டரை 48 மணிநேரத்தில் பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு இப்போதைய மத்திய அரசு எந்தமாதிரியான பாடத்தைக் கற்பித்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இதற்கு முன்பு 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும், நமது நாட்டுக்கும் எந்தமாதிரியான பணிகளை ஆற்றியது? குறிப்பிட்டுக் கூறும் அளவுக்கு அவர்கள் எதையும் செய்யவில்லை. மேலும், ஊழல் நிறைந்த ஆட்சியாகவே முந்தைய மத்தியஅரசு இருந்தது. ஆனால், இப்போதைய அரசு அனைத்தையும் முற்றிலுமாக மாற்றியுள்ளது. நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை, நேர்மை, பொருளாதார வளர்ச்சிக்கான சிறப்பான திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்து சென்றுள்ளோம் என்றார் அமித்ஷா.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...