பாலாகோட் சுயலாபத்துக்காக கேள்வி எழுப்புகின்றனர்

பாகிஸ்தானின் பாலாகோட்டில் பயங்கரவாத முகாம்கள்மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதல் குறித்து கேள்விகளை எழுப்பியதன் மூலம் எதிர்க் கட்சிகள் சுய லாபம் அடைந்துள்ளன என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இந்திய விமான படைத் தாக்குதலையும், துல்லியத் தாக்குதலையும், மக்களவை தேர்தலுக்கான பிரசாரங்களில் தொடர்புபடுத்தி பேசக்கூடாது என்றார் அவர்.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜேட்லி பேசியதாவது:

ராணுவ வீரர்களின் புகைப் படங்கள், அரசியல் கட்சிகளின் விளம்பரங்களில் இடம்பெறக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். 1971-இல் பாகிஸ்தானுடன் போர் நடந்தபோது, மொத்த எதிர்க்கட்சிகளும் அரசுக்கு ஆதரவாகநின்றன. அப்போது, ஜனசங்கத்தின் தலைவராக இருந்த வாஜ்பாய், அரசின் ஒவ்வொரு முடிவையும் ஆதரித்தார்.
ஆனால், அண்மையில் நடந்த புல்வாமா பயங்கரவாதத்தாக்குதல், இந்திய விமானப்படை பாலாகோட்டில் நடத்திய தாக்குதல் ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திரமோடி மீது குற்றம்சாட்டின.

21 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கை, நாட்டுநலனை கடுமையாகப் பாதித்து விட்டது. இந்தியாவை பாகிஸ்தான் இகழ்வதற்கான வாய்ப்பாக அது அமைந்து விட்டது. ஆயுதப் படைகளின் நடவடிக்கைகள் குறித்து நாட்டுமக்களின் மனதில் சந்தேகங்களை கிளப்பும்வகையில் சுயலாபத்துக்காக கேள்வி எழுப்புகின்றனர். இதைச்செய்வதன் மூலமாக தன்னைத்தானே அவர்கள் சுட்டு கொள்கின்றனர்.

ஒசாமா பின்லேடன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய போது, அவர்களது நடவடிக்கைகள் குறித்து யாரும் கேள்விகளை எழுப்ப வில்லை. அது குறித்து ஆதாரங்களையும் கேட்கவில்லை.
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை: பயங்கர வாதத்தை நீங்கள் (பாக்.) தொடர்ந்து ஊக்கப் படுத்தினால், அதற்கான பெரும்விலையை நீங்கள் கொடுக்க வேண்டியிருக்கும். பயங்கரவாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்பது உங்களுக்கு புரியவரும். அதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...