அமேதியில் இருந்து வயநாட்டுக்கு ஓடுவதன் மர்மம் என்ன

அமேதி தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியும், ராகுல்காந்தி எம்.பியும் என்ன செய்தார்கள் என்று மக்கள் கேள்விகேட்பார்கள் என்று பயந்து ராகுல் காந்தி, கேரளாவின் வயநாட்டில் இந்த முறை போட்டியிடுகிறார்.

கேரளாவில் ராகுல் காந்தி செல்லும் நேரத்தில் அங்கு திருப்திபடுத்தும் அரசியல் நிலவிவருகிறது. உங்களுடைய வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்புடன் விளையாடினீர்கள். நாட்டில் எங்கு நீங்க சென்றாலும், நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று கேள்விகேட்பார்கள்

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிரவாத தாக்குதல் நடந்தபோது, சுவாமி அசீமாநானந்த் மற்றும் அப்பாவிகளை சிறையில்தள்ளியது காங்கிரஸ். இந்து மதத்தின் மீது தீவிரவாதச் சாயம் பூசியது.

சம்ஜவுதா ரயில் தீவிரவாத தாக்குதலில் அப்போதைய மத்திய அமைச்சர் பி.சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே, ராகுல் காந்தி ஆகியோர், அமெரிக்க அதிகாரிகளிடம், லஷ்கர் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லை, ஆனால், இங்கு இந்து தீவிரவாதம்தான் இருக்கிறது. ஆனால், விசாரணை முடிந்து, சுவாமி அசீமானானந்த் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவித்தது.

மதத்தோடு தீவிரவாதத்தை தொடர்புபடுத்தி பேசி காங்கிரஸ் கட்சி பெரியபாவத்தை செய்தது. இதற்காக ராகுல் காந்தி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் தங்களின் வாக்குவங்கிக்காக புனிதமான இந்து சமூகத்துக்கு பாவம் செய்து விட்டார்கள்.

இந்து எப்போதாவது தீவிரவாதியாக முடியுமா, எறும்புக்குக்கூட உணவு அளித்து காத்துவரும் இந்துக்கள் எவ்வாறு தீவிரவாதிகளாக மாறுவார்கள் என்ற ராகுலுக்கு தெரியாது. ராகுலகாந்தி இதுபோன்று பேசியதற்கு மக்களிடம் மன்னிப்புகோர வேண்டும்.

நான் ராகுலிடம் ஒருகேள்வி கேட்கிறேன், ஏன் உங்கள் கொள்ளுதாத்தா ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கரை நாடாளுமன்றத்துக்கு செல்ல விடாமல் தடுத்தார். நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் படம் ஏன் வைக்கப்பட வில்லை. இன்று நீங்கள் அம்பேத்கரை குறிப்பிட்டு பேசுகிறீர்கள், ஆனால் மோடி அரசு அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டி வருகிறது.

மோடிதான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நீங்கள் உருவாக்கிய மகாகட்பந்தன் கூட்டணியில் யார்பிரதமராக வருவார் தெரியுமா. உங்களின் கூட்டணியில் கொள்கை இல்லை, நடைமுறை இல்லை. மோடியைப் பார்த்து அச்சப்பட்டு ஒன்றாக இணைந்துள்ளார்கள்

அமித் ஷாஉ.பி.,யில்  பேசியது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...