பாஜக.,வின் தேர்தல்அறிக்கை சங்கல்ப பத்ர வெளியானது

பாஜக.,வின் தேர்தல்அறிக்கை சங்கல்ப பத்ர – உறுதிமொழிப் பத்திரம் என்ற பெயரில் வெளியானது.

தேர்தல் அறிக்கையை தில்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப்பேசிய பாஜக.,தலைவர் அமித்ஷா, பாஜக.,வின் தேர்தல் அறிக்கைக்கு பெயர் சங்கல்ப பத்ரா. அதாவது உறுதிமொழிப் பத்திரம். பாஜக.,வின் 5 ஆண்டு ஆட்சியில் சாதனைகள் பல படைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்காக பணியாற்றியுள்ளோம். 2014-19 காலக் கட்டம் இந்தியாவின் சரித்திரத்தில் பொற்காலம். பாஜக., ஆட்சியில், இந்தியபொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது. தேசப்பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம். 50 கோடி ஏழைகளுக்காக உழைத்துள்ளோம் .

வெளிப்படையான அரசுக்கு மோடி அரசு ஓர் உதாரணம். 5 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் ஏதும் இல்லை. பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் ஏழைகளுக்கு பலதிட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன.

5 ஆண்டில் மிகப்பெரிய முடிவுகளை எடுத்துள்ளோம். இளைஞர்கள் விருப்பத்துக்கு ஏற்ப பணியாற்றி இருக்கிறோம். தேர்தல் அறிக்கைக்காக 6 கோடிபேரிடம் ஆலோசனை கேட்டுள்ளோம்… என்று கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை – சங்கல்ப பத்திரத்தில்…பாஜக தேர்தல் அறிக்கை தொலைநோக்கு பார்வை கொண்டது,

நடைமுறைக்கு சாத்தியமானது

பாஜக தேர்தல் அறிக்கையில் 75 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன

பாஜக தேர்தல் அறிக்கையில் 12 துணைத்தலைப்புகளில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன

வேளாண்மை, ஊரகவளர்ச்சி சார்ந்து 25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதி கூறப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்துசெய்யப்படும்

உள்கட்டமைப்புத் துறையில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு உறுதி

பயங்கரவாதத்திற்கு எதிராக, துளிகூடசமரசம் இல்லை என்ற கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும்

ராணுவத்திற்கு தேவையான அதிநவீன கருவிகள், தளவாடங்கள் வாங்குவது விரைவு படுத்தப்படும்!

ஜிஎஸ்டி நடைமுறை மேலும் எளிமையாக்கப்படும்

யோகாவை உலகளவில் கொண்டுசெல்ல மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்

நாட்டில் உள்ள தேசிய நெடுஞ் சாலைகளின் நீளம் 2022-க்குள் இரட்டிப்பாக்கப்படும்

60 வயதான சிறு, குறு விவசாயிகளுக்கு ஒய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

சபரிமலை விவகாரத்தில் மதநம்பிக்கைகள், சடங்குகளை உச்சநீதிமன்றம் முன் எடுத்துரைத்து, அவற்றை பாதுகாப்போம்

தீவிரவாதம் வேரோடு அழிக்கப்படும்வரை, தீவிரவாதத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும்

வட்டியில்லாமல் ரூ.1 லட்சம் வரை குறுகியகால விவசாய கடன்

கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கு வட்டி இருக்காது

பாஜக தேர்தல் அறிக்கையின் சில முக்கிய வாக்குறுதிகளின் விவரம் பின்வருமாறு:

  • கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் சுமூகமான முறையில் விரைவில் ராமர் கோயில் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
  • பயங்கரவாதம் முற்றிலும் அழிக்கப்படும் வரை பயங்கரவாதத்துக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் தொடரும்.
  • 370 சட்டப்பிரிவை நீக்கி நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும்.
  • அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஊரக வளர்ச்சிக்காக ரூ.25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • அனைத்து மாநில அரசுகளின் ஒப்புதலோடு குடியுரிமை திருத்தம் மசோதா தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மூலம் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு
  • சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள், சடங்குகளை உச்ச நீதிமன்றம் முன் எடுத்துரைத்து, அவற்றை பாதுகாப்பது.
  • சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம்.
  • 1 முதல் 5 ஆண்டுகளுக்குள் முறையாக கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லாமல் ரூ.1 லட்சம் வரை குறுகிய கால விவசாய கடன்.
  • 60 வயது கடந்த சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம்.
  • ஜிஎஸ்டி நடைமுறை மேலும் எளிமையாக்கப்படும்.
  • புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
  • விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை.
  • யோகாவை உலக அளவில் கொண்டுசெல்ல மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கப்படும்.
  • விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க தேசிய தேன் மற்றும் தேனீக்கள் மையம் உருவாக்கப்படும்.
  • மாநில காவல் துறையை நவீன மயமாக்க நிதியுதவி வழங்கப்படும்.
  • 2 ஹெக்டேர் வரை நிலமுள்ள விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம், நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

உள்ளிட்ட 75 வாக்குறுதிகள் இந்த 48 பக்கங்கள் கொண்ட பாஜக சங்கல்ப பத்திரத்தில் இடம்பெற்றுள்ளன.

One response to “பாஜக.,வின் தேர்தல்அறிக்கை சங்கல்ப பத்ர வெளியானது”

  1. செ.சுகுமாா் உடன்குடி says:

    சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையும் போதனைகளை ஒவ்வொரு இந்துவிற்கும் கற்றுக் கொடுக்க வழி செய்யப்படும் என்ற திட்டம் இந்து சமூகத்திற்கு அவசியமானது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...