யாரை புகழ்வது..?

ஒடிஷாவின் பாலாசோர் தொகுதியில் இருந்து முதல்முறையாக மக்களவைக்குத் தேர்வான பிரதாப் சந்திர சாரங்கிக்கு, திரு நரேந்திர மோடி அவர்கள் தனது கேபினட்டில் இடம் அளித்திருக்கிறார்.

ஒடிஷாவைச் சேர்ந்த பிரதாப் சந்திர சாரங்கி. அம்மாநிலத்தின் பாலாசோர் தொகுதியில் இருந்து முதல்முறையாக எம்.பி-யாகியிருக்கிறார் அந்த எளிய மனிதர். சைக்கிளில், கிராமங்களில் மக்களோடு மக்களாக வலம்வரும் அவர், தேர்தலின்போது ஆட்டோவில் சென்றுதான் பிரசாரம் செய்துள்ளார். சொந்த வீடோ அல்லது காரோ இல்லாத எளிமையான மனிதரான அவரை அணுகுவதும் எளிது என்கிறார்கள், ஒடிஷா மக்கள்.

முதல்முறையாக மக்களவைக்கு பா.ஜ.க சார்பில் வேட்பாளராகக் களமிறங்கிய பிரதாப்சந்திர சாரங்கிக்கு எதிராகக் களமிறங்கிய 2 வேட்பாளர்களும் மிகவும் பலம்பொருந்தியவர்கள். ஒருவர் பிஜுஜனதா தளம் சார்பில் களமிறங்கிய சிட்டிங் எம்.பி-யும் தொழிலதிபருமான ரபீந்திரகுமார் ஜெனா. பெரும் பணக்காரரான அவருக்கு சொந்தமாக News World Odisha என்ற செய்தித் தொலைக்காட்சியும் உண்டு. அதேபோல், அவருக்கு ஆதரவாக, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பிரசாரம் மேற்கொண்டார்.

மறுபுறம், காங்கிரஸ் வேட்பாளர் நபஜோதி பட்நாயக். ஒடிஷா மாநில காங்கிரஸ் தலைவரான நிரஞ்சன் பட்நாயக்கின் வாரிசு என்ற அடிப்படையில் மக்களிடம் பிரபலமானவர் இவர். நபஜோதியின் சித்தப்பாவான சௌமியா ரஞ்சன் பட்நாயக், ஆளும்கட்சியான பிஜுஜனதா தளத்தின் மாநிலங்களவை எம்.பி-யாகப் பதவி வகித்துவருகிறார். ஒடிஷாவின் மிகப்பெரிய செய்தி நெட்வொர்க்கான ஈஸ்டர்ன் மீடியா லிமிட்டெட் (EML) ரஞ்சன் பட்நாயக்கிற்குச் சொந்தமானது. அம்மாநிலத்தில் அதிகம் விற்பனையாகும் சம்பாத் (Sambad) மற்றும் 24 மணிநேர செய்தித் தொலைக்காட்சியான கனக் டிவி (Kanak TV) ஆகியவை ஈஸ்டர்ன் மீடியாவுக்குச் சொந்தமானவை.

இந்த இரண்டு வேட்பாளர்களின் அரசியல், அதிகாரம், பணபலம் ஆகியவற்றைத் தோற்கடித்து வென்றிருக்கிறார், பிரதாப்சந்திர சாரங்கி. ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இளம்வயதில் இருந்தே ஈடுபாடுகொண்ட சாரங்கி, அப்பகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். சைக்கிளில் கிராமம் கிராமமாக வலம்வந்து, தொடர்ந்து மக்களைச் சந்தித்துவந்த அவர், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக பாலாசோர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட நீலகிரி தொகுதியில் இருந்து இரண்டு முறை சுயேச்சை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தவர்.

இப்பொழுது மக்களவைக்கு,பா.ஜ.க சார்பில் களமிறங்கிய சாரங்கி 12,956 வாக்குகள் வித்தியாசத்தில் கோடீஸ்வர் ஜெனாவைத் தோற்கடித்து, பலாசோர் தொகுதி எம்.பி-யாகியிருக்கிறார் சாரங்கி. தோற்கடித்தார் என்பதைவிட?அந்த தொகுதி மக்கள் செல்வந்தரின் செல்வத்துக்கு தமிழர்களாகிய நம்மை போல் விலை போகாமல் எளிமையான,நேர்மையான மனிதரை தேர்ந்தெடுக்கும் அந்த பண்பு அந்த எளிய அத்தனை மக்களுக்கும் ஒருசேர எப்படி உள்ளது?உண்மையிலேயே அந்த தொகுதி மக்கள் வசிக்கும பக்கம் நோக்கி,கை எடுத்து கும்பிட தோன்றுகிறது..

யாரை புகழ்வது?அந்த எளிய வேட்பாளரையா?அவரை தேர்ந்தெடுத்த அந்த தொகுதி மக்களையா?அவருக்கு சீட்டு கொடுத்த கட்சியையா?இந்த எளிய மனிதருக்கு போய் பிரச்சாரமும் செய்து,மந்திரி பதவியையும் கொடுத்துள்ள பிரதமரையா?

இவர்களுக்கு இந்த பண்பு எப்படி வந்தது?இந்த கட்சியி்ன் தலைவரும், பிரதமரும்,வேட்பாளரும் ஆர்.எஸ்.எஸ் வளர்ப்பு என்பதனால் இருக்குமோ..?

எத்தனையோ கோடிஸ்வரர்கள்,ராஜ குடும்பத்தினர்,சினிமா பிரபல்யங்கள்என பலர் மந்திரி பதவிக்கு காத்திருக்க,இந்த எளிய மனிதரை தேடி போய், அவருக்கு,மந்திரி பதவியை கொடுத்து கௌரவிக்கும் இந்த பண்பு வேறு எந்த கட்சிக்கு,வேறு எந்த தலைவனுக்கு இருக்கும்?

இவைகள் எல்லாம் தமிழ்நாட்டில் சாத்தியமா?இவைகளை தமிழர்களாகிய நம்மால் நம்பத்தான் முடிகிறதா?

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...