லோக்சபா தேர்தல்குறித்து ஆராய தமிழக பா.ஜ. சார்பில் கோட்டம் வாரியாக கூட்டம் நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதம்:
லோக்சபா தேர்தலில் பா.ஜ. தேசிய அளவில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. நரேந்திர மோடி இரண்டாவது முறை பிரதமராக பொறுப்பேற்றார். இந்த மிகப்பெரிய மகிழ்ச்சியிலும் தமிழகத்தில் ஒரு இடம்கூட வெற்றி பெற முடியாதது மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது.
வருங்காலங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்றிடவும் மண்டல பொதுச்செயலர்கள், மண்டல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நாம் சந்தித்த கருத்துக்களை முன்வைக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூட்டத்திலும் நானும் மாநில அமைப்பு பொதுச் செயலர் கேசவ விநாயகமும் கலந்துகொள்ள உள்ளோம்.
அதில் தேசியபொறுப்பில் உள்ளவர்கள், மாநில நிர்வாகிகள், தொகுதி அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், முழு நேர பணியாளர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 13ம் தேதி மதுரை, 29ல் ராமேஸ்வரம் கோட்ட கூட்டம் நடக்க உள்ளது.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |